வெள்ளி, 8 ஜூன், 2012

ஜூன் 2012 மாதத்திற்கான தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார குறுவள மையப் பயிற்சி.


ஜூன் 2012 மாதத்திற்கான தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார குறுவள மையப் பயிற்சி.

மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ 5 / பயிற்சி / அ க இ / 12 நாள்.  6 .12
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி : 30.06.2012
உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி : 23.06.2012
தலைப்பு : CCE & SABL.

வியாழன், 7 ஜூன், 2012

2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிநிரவலுக்கு பின் நடைபெறும்


2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிநிரவலுக்கு பின் நடைபெறும்

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதத்தில் பொது மாறுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கமாக நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்தவித தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. எனவே இதுகுறித்து கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் கூறியது கலந்தாய்வு முடிந்த பிறகு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 : 30 ஆசிரியர் மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்த உள்ளோம். அதில் குறைந்தபட்சம் 2 ஆசிரியர்களும் 71 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விதியை மாற்றி இனி
61 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள்       என  1 : 30 விகிதாச்சாரப்படி பணிநிரவல் முடித்தப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதே நிலை தான் பள்ளிக் கல்வித்துறையிலும் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே 2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, பணிநிரவலுக்கு பின் நடைபெறும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி       1 : 30 விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் தான் அதற்கான SSA நிதி மத்திய அரசிடம் இருந்து   விடுவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், 6 ஜூன், 2012

முப்பருவ கல்விமுறையில் ஐந்து வகை பதிவேடுகள்


முப்பருவ கல்விமுறையில் ஐந்து வகை பதிவேடுகள்

உடுமலை: பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ள முப் பருவ கல்விமுறையில், ஐந்து விதமான பதிவேடுகளை பராமரிப்பது குறித்து ஆசிரிய

ர்களுக்கு பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது.புத்தகங்களை சுமந்து சென்று படிப்பதற்கு பதிலாகவும்; தேர்வு பயத்தினால், பள்ளியில் இடை நிற்றல்

அதிகரிப்பதை தவிர்க்கும் வகையிலும், பருவ முறையில் கல்வி கற்பிக்கும் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த அரசு முடிவெடுத்தது.
அதன்படி, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் முதல் பருவமும்; செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் பருவமும், ஜனவரி மாதம்

முதல் ஏப்ரல் மாதம் முறை மூன்றாம் பருவம் என பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அப்பருவத்திற்கு ஏற்றாற் போன்று புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தேர்வு வைத்து மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு மாற்றாக மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. இதில், வளர் அறிவு தேர்வு முறை, தொகுத்து

அறிவு தேர்வு முறை என இரண்டு முறையில் மதிப்பீட்டு செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல், கிரேடு வழங்கப்பட உள்ளது. இது குறித்து

ஆசிரியர்களுக்கு விளக்கும் வகையில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 6,7,8 கற்பிக்கும்

ஆசிரியர்களுக்கு தொடர் மதீப்பீட்டு முறை குறித்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில், எட்டு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர்

கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களும், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களும் பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாமில், மாணவர்களின்

திறனை மேம்படுத்துவது குறித்தும்; அவர்களது திறமையை எவ்வாறு மதிப்பீடுவது என்பது குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் இம்முறையில் பின்பற்ற வேண்டிய

பதிவேடுகள் குறித்தும் விளக்கப்பட்டன.அதில், மதிப்பீடு முறையில், மாணவர் கற்றல் செயல்பாட்டுப்பதிவேடு, ஆசிரியர் மதிப்பீட்டுப்பதிவேடு, ஆசிரியர் மதிப்

பீட்டுப்பதிவேடு-தொகுப்பு மதிப்பெண் மற்றும் தரநிலைப்பதிவேடு கல்விசார் படாப்பகுதிகள் மற்றும் உடற்கல்வி, பாட இணைச் செயல்பாடுகள்- வாழ்க்கை திறன்கள்

தரநிலைப்பதிவேடு, மனப்பான்மைகளும், மதிப்புகளும் தர நிலைப்பதிவேடு, நன்னலம், யோகா மற்றும் முழு உடற்பயிற்சி தரநிலைப்பதிவேடு, பிற இணைச் செய

ல்பாடுகளான நாட்டுப்புறக் கலைகள், மரபு விளையாட்டுகள், மன்றச் செயல்பாடுகள் தர நிலைப்பதிவேடு, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீடு சரிபார்ப்புப்பட்டியல்

மதிப்பெண் மற்றும் தர நிலை பதிவேடு, மாணவர் திரள் பதிவேடு, மாணவர் மதிப்பீட்டு அட்டை, ஆண்டு இறுதித்தரநிலை உள்ளிட்ட பதிவேடுகளை முறையாக

பராமரிப்பது குறித்தும் என ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

செவ்வாய், 5 ஜூன், 2012

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 16-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.


  

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 16-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது. 16-ந்தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

19-ந்தேதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் விருப்பத்தின் பேரில் மீளவும் சொந்த ஒன்றியத்திற்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 23-ந்தேதி உதவி தொடக் கக்கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது.

24-ந்தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணி மாறுதல் ஆணை வழங்குதல்.

27-ந்தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்படுகிறது.

28-ந்தேதி முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்கப்படுகிறது. பிற்பகல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்படும்.

29-ந்தேதி முற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணையும், பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணையும் வழங்கப்படுகிறது.

இந்த தகவலை தொடக்கக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

teacher trfr shedule dse