ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கடன் வாங்கிப் படித்தல் by era.edwin


கடன் வாங்கிப் படித்தல்

“இனி கல்விக் கடனைப் பெறுவதற்கு மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழையத் தேவை இருக்காது. நிமிர்ந்த தலையோடும் கம்பீரத்தோடும் அவர்கள் வங்கிகளுக்குள் கல்விக் கடனுக்காக நுழையலாம்.

ஒரு காலத்தில் கல்விக் கடன் ஒரு சலுகை போல இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கல்விக் கடன் என்பது மாணவர்களின் உரிமையாக மாறியிருக்கிறது,”

என்பது மதிரிப் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம் . ஆக கல்வியோ, வேலையோ மாணவ்ர்களது உரிமையாக மாறாது போயினும் கல்விக் கடனேனும் அவர்களது உரிமையாய் போயிருக்கிறது. இந்த மட்டிலும் உரிமை என்று சொல்லிக் கொள்கிற மாதிரி மாணவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தந்தமைக்காக அவரைப் பாராட்டியேத் தீர வேண்டும்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“கல்விக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களது படிப்பு இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவையும் செய்கிறார்கள். அதையும் குறை சொன்னால் எப்படி?” என்றுகூடத் தோன்றும்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வை. பிச்சை எடுத்தேனும் படி என்கிறாள் கிழவி. கொஞ்சம் இதை மாற்றிச் சொன்னால் கற்பதற்காக பிச்சை வேண்டுமானாலும் எடு என்றாகும்.

“உண்ணீர்
உண்ணீர் என்றே
ஊட்டாதார் தம் மனையில்
உண்ணாமை
கோடி பெறும்”

என்று சொன்ன அவ்வை கல்வி என்று வரும் போது அதற்காக பிச்சைகூட எடுக்கலாம் என்றுதானே சொல்லியுள்ளார்.கல்விக்காக பிச்சையே எடு என்று சொன்ன அவ்வையைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் கடனை ஏற்பாடு செய்து , அதை மாணவனது உரிமையாக்கி உரிமையோடும் கம்பீரத்தோடும் கடனைப் பெற்று கல்வியைத் தொடர் என்று சொல்லும் சிதம்பரத்தை நக்கலடிப்பீர்கள். நீங்களெல்லாம் உருப்படுவீர்களா? என்றும் சிலர் கேட்கக் கூடும்.

மீண்டும் சொல்கிறேன், மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகத்தான் படும். கொஞ்சம் உள் நுழைந்து அலசினால் இதன் பின்னனியில் இருக்கும் அயோக்கியத்தனம் அம்பலப் படும்.

இதில் நீண்ட விவாதம் இருக்கிறது. அதில் நமக்கெதுவும் தயக்கம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் சட்டென்று ஒன்றை சொல்லிவிட்டுத் தொடரலாம் என்று படுகிறது.

பிச்சை எடுத்து படிப்பதில் எந்தப் பிழையும் இருப்பதாகப் படவில்லை. ஒருக்கால் ஒரு பிள்ளை பிச்சை எடுத்துப் படிக்கிறான் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்.அவன் படித்து முடித்ததும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று பெருமிதத்தோடும் ஒரு வகையான பூரிப்போடும் எதிர்காலத்தை எதிர்கொள்வான்.

அவன் பிச்சை எடுத்து படித்தது அவனுக்கு எந்த விதத்திலும் சோர்வையோ அழுத்தத்தையோ தராது. மாறாக, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி எந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பார் என்று   அடுத்தத் தலைமுறையை உற்சாகப் படுத்த உதவுவதாகவும் இருக்கும்.

ஆனால் கடன் பெற்று படித்து வருபவனுக்கு வேலை கிடைக்கும் முன்னமே கடனும் வட்டியுமாக சேர்ந்து ஒரு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.

பிச்சை எடுத்துப் படித்தவன் படித்து முடித்ததும் இலகுவாகி விடுகிறான். அவனால் சொல்ல முடியும்,

“பிச்சை எடுத்தவன்தான் நான். ஆனாலும் படிப்பு எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. பிச்சை எடுத்தேனும் படி” என்று.

கடன் வாங்கி படித்த்வனால் அப்படி சொல்ல இயலாது. அவனால் இப்படித்தான் சொல்ல இயலும்,

“கடன வாங்கிப் படிக்கிறதுக்கு நான் படிக்காமலே இருந்திருக்கலாம். வீணாப் போயிட்டேன். தயவு செஞ்சு கடன் வாங்கி படிச்சுடாத”

அமெரிக்கவைப் பற்றி இப்படி ஒரு தகவல் உண்டு,

அமெரிக்காவில் நிறைய பேர் கல்வியைத் தவிர்ப்பதற்கு அங்கு கல்வி நிறைய செலவு வைக்கிறதாம். சரி, கடன் வாங்கிப் படிப்பைத் தொடங்கலாம் என்று செய்பவர்கள் வட்டி கட்ட முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்களாம்.

 நம் நாட்டிலும் வட்டி விகிதம்விவசாயக் கடனை விட, நகைக் கடனைவிட, ஏன் வாகனக் கடனை விட அதிகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். தனி நபர்க் கடனுக்கு மிக நெருங்கிய வட்டி கல்விக் கடனுக்கு.

அநேகமாக 14 சதம் வட்டி கல்விக் கடனுக்கு.

பொறியியல் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன் ஒரு வங்கியில் 60000 ரூபாய் கடன் வாங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். முதலாமாண்டு முடியும் போது அதற்கான வட்டி (14 சதம் என்று வைத்துக் கொண்டால்) 8400 ரூபாய். ஆக 60000 கடன் வாங்கி முதலாமாண்டை அவன் முடிக்கும் போது அவனது கடன் தொகை மொத்தம் 68400 ரூபாய் என்றாகும்.

இப்போது இரண்டாமாண்டு அவன் 60000 ரூபாய் கடன் வாங்கினால் அந்த ஆண்டு முடிவில் அசல் 120000 ஆகும். இதற்கு வட்டி 16800 ரூபாய் அகும். முதலாமாண்டு வட்டி 8400 ருபாயை சேர்க்க இரண்டாமாண்டு முடிவில் மொத்த வட்டித்தொகை 25200 ஆகும். ஆக இரண்டாமாண்டு முடிவில் வட்டியும் முதலுமாக அவனது கடன் கணக்கில்1,45,200 சேரும்.

மூன்றாமாண்டு இன்னொமொரு 60,000 ருபாய் அவன் கணக்கில் சேர மூன்றாமாண்டு தொடக்கத்தில் அவன் கட்ட வேண்டிய அசல் 1,80,000 ரூபாய் ஆகும். அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டிற்கான வட்டியைக் கணக்கிட்டால் 25,200 ரூபாய் ஆகிறது. இதை முதல் இரண்டு ஆண்டுகளுக்கான தொகையோடு கூட்ட 50,400 ஆகிறது.

நான்கம் ஆண்டும் அவன் 60,000 ரூபாய் கடன் வாங்க அசல் மட்டும் 2,40,000 ரூபாய் ஆகிறது. அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டுக்கான வட்டி மட்டும் 33,600 வரும். ஆக மொத்த வட்டி 94,000 ரூபாய் ஆகிறது.

அவன் படிப்பை முடிக்கும் வரைதான் தனி வட்டி. அதன் பிறகு கூட்டு வட்டிக்கு போய்விடுமாம். எனில் அவன் நான்காமாண்டு முடிக்கும் போது அவன் வாங்கிய அசல் 2,40,000 ரூபாயோடு அது வரை உள்ள மொத்த வட்டியான 94, 600 ரூபாயும் சேர்ந்து 3,34,600 ரூபாய் அவன் கணக்கில் அசலாகிவிடும்.

இனி ஒவ்வொரு மாதமும் வட்டியும் அசலோடு சேர்ந்துவிடும். எனில்,

படிப்பு முடிந்த முதல் மாதம் அவன் கட்ட வேண்டிய வட்டி ஏறத்தாழ 3,900 ரூபாய். வேலை இல்லாமல் கட்ட முடியாமல் போனால் இந்த 3, 900 ரூபாயும் அசலோடு சேர்ந்து 3,38,500 ரூபாயாகும். அடுத்த மாதம் 3,38,500 ரூபாய்க்கு வட்டி கணக்கிடப் படும்.

எவ்வளவு பெரிய கடன் வலையில் நம் பிள்ளைகளைத் தள்ளுகிறார் பாருங்கள்.

இவ்வளவு ஆபத்தான சிக்கல் இது என்பது கூட்டல் கழித்தல் கணக்கையே தப்பு தப்பாக செய்யும் எனக்கே புரிகிறது என்றால் காங்கிரஸின் மூளை என்று சராசரி காங்கிரஸ் காரர்களாலும், இந்தியாவின் மூளை என்று உச்ச நிலையில் நின்று யோசிக்கக் கூடிய காங்கிரஸ்காரர்களாலும் பெருமையோடு கொண்டாடப் படுகிற சிதம்பரம் அவர்களுக்கு இது புரியாது என்று நம்புவதற்கு நான் என்ன மண்மோகன்சிங்கா?

இவ்வளவு புரிந்தும் ஏன் நெஞ்சை நிமிர்த்தி கடன் வாங்கப் போ என்று தள்ளுகிறார். காரணம் மிகவும் எளிதானது.

மாணவனை வங்கிக்கு தள்ளுவதன் பின்னனியில் இருப்பது மாணவனின் எதிர்காலமல்ல, கல்லூரி தாளாளரின் எதிகால லாபம். கல்லூரி தாளாளர் என்பதை விடவும் கல்லூரி முதலாளி என்பதே பொருத்தமாக இருக்கும். சில கல்லூரிகளில் தாளாளர் ஓனர் என்றே அனைவராலும் விளிக்கப் படுகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் சற்றேரக் குறைய 3,500 இடங்கள் இருக்கலாம். கொஞ்சம் கூடவோ குறையவோ இது இருக்கலாம். இதில் 2,000 பேர் விடுதியில் தங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மூன்று நேரமும் 2,000 பேர் சாப்பிடக் கூடிய உணவகம் ஒன்றிற்கு அவர் உரிமையாளர் ஆகிறார். ஒவ்வொரு நேரமும் 2,000 பேர் சாப்பிடக்கூடிய உணவகம் எனில் அது ஏறத்தாழ இரண்டு சரவணபவன் ஹோட்டல்களுக்கு சமம்.

ஒரு நாளைக்கு 6,000 பேர் சாப்பிடக்கூடிய ஹோட்டல் எனில் மளிகைச் சாமான்களை, காய்கறியை, பாலை வேறு கடையிலா வாங்க அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கும். எந்தக் கணக்கிலுமே சேராமல் அவர் ஒரு பெரிய மளிகைக் கடைக்கும், காய்கறி மற்றும் பால் கடைக்கும் அதிபராகிறார்.

ஏறத்தாழ 3,500 மாணவர்களும் அனைத்து நோட்டுகள் மற்றும் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் போது ஒரு மிகப் பெரிய ஸ்டேஷனரி கடைக்கு உரிமையாளாராகிறார்.

ஒரு கேண்டீன் உரிமையாளாராகிறார்.

குறைந்தபட்சம் 25 பேருந்துகளுக்கும் உரிமையாளாராகிறார்.

ஒரு கல்லூரியை ஆரம்பித்தால் உப விளைவுகளாக இத்தனை வணிகத் தளங்களுக்கும் முதலாளியாகிறார்.

கேட்கலாம்,

இதற்கும் மாணவர்களது வங்கிக் கடனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

இருக்கிறது.

இவ்வளவு பெரிய முதலாளி லாபமடைய வேண்டுமெனில் 3,500 மாணவர்கள் வேண்டும்.  அவர் மாணவர்களைப் பார்க்கிறார். மாணவர்களிடம் பணமில்லை என்பது புரிகிறது. அரசாங்கத்தைப் பார்க்கிறார்.

“மாணவர்கள் வராவிட்டால் நான் தெருவுக்கு வந்து விடுவேன்”

அரசாங்கம் சொல்கிறது,

“விடுவோமா. தைரியமாகப் போங்கள். கடன் கொடுத்து மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.”

முதலாளிகள் சொல்லியிருக்க வேண்டும்,

“விசுவாசம் மாறாமல் இருப்போம்.”

கல்வி பொதுப் படும் வரை இத்தகைய அசிங்கங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

தாளாளர் முதலாளியாகிவிடுவார். கல்வி சரக்காகிவிடும். மாணவன் வாடிக்கையாளனாகிவிடுவான். அரசோ முதலாளி நட்டப் படாமல் பார்த்துக் கொள்ள்ளும்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

இரவு...தீப் பந்தங்கள்... கல்வி


இரவு...தீப் பந்தங்கள்... கல்வி

அந்தப் பல்கலை கழகத்தில் என்ன நடத்தினார்கள் என்பதில் ஏதேனும் விவாதம் இருக்குமானால் அதைக் கொஞ்சம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேத் தோன்றுகிறது.

அந்தப் பல்கலைக் கழகம் குறித்த எந்தத் தகவலும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நம்மை அழைத்துப் போகின்றன.

பத்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கிப் படித்திருக்கிறார்கள்.



இத்தனை விளம்பரங்கள், இத்தனை விதமான போக்கு வரத்து வசதிகள், இத்தனை கேம்பஸ் வாய்ப்புகள் எல்லாம் கடந்து வியக்குமளவு ஜனத்தொகை
எல்லாம் இருந்தே இவ்வளவு மாணவர்களை கொண்டு வருவது சாத்தியமே இல்லாத போது அது சாத்தியப் பட்டிருக்கிறது.

படிக்கிறவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் இன்னபிற கல்விச் செலவுகள் எல்லாம் இலவசம்.

இலவசம் என்பதை விட இது அரசின் கடமை என்பதை அந்த மன்னன் உணர்ந்திருக்கிறான்.

இரவிலும் வகுப்புகளும் விவாதங்களும் தொடர்ந்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவே இயலவில்லை,

தீப் பந்தங்களின் ஒளியில் இவை சாத்தியப் பட்டிருக்கிறது.

ஒரு மன்னனின் சாம்ராஜியத்தில் எத்தனை கிராமங்கள் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இருநூறு கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானம் முழுவதையும் அந்த மன்னன் கல்விக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறான்.

பாஹியான் சொன்னதாகக் கிடைக்கும் குறிப்புகள் நம்மை திக்கு முக்காட வைக்கின்றன,

 பத்தாயிரம் மாணவர்களுக்கு இரண்டாயிரம் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து நெறிப் படுத்தியிருக்கிறார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அங்கு பணியாற்றியிருக்கிறார்கள்.

கல்விதான் மண்ணிற்கு வெளிச்சத்தையும் சாரத்தையும் தரும் என்று புரிந்திருக்கிறது அந்த மன்னர்களுக்கு.

“ அறிவை அள்ளித் தரும் இடம்” என்று பொருள் படும் படி “நாளந்தா” என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.



வருவாயில் பெரும்பகுதியை கல்விக்கு செலவு செய்திருக்கிறார்கள் முடி சுமந்த மன்னர்கள்.

வருவாயில் பத்து சத விகிதம் கூட மக்களாட்சியில் கல்விக்கு இல்லை.

பத்தாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் இரண்டாயிரம் ஆசிரியர்களும், மூவாயிரம் ஆசிரியரில்லாத ஊழியர்களுமென்று ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் பணி புரிந்துள்ளனர்.

முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நம் மண்ணின் மிக நீண்ட கனவாகவே உள்ளது.

நாளந்தாவின் பெருமையும் கல்வியின் மகத்துவமும் நிச்சயமாய் பிரதமருக்கும் எல்லா முதல்வர்களுக்கும் தெரிந்தேதான் உள்ளது.



எனில் ,

இவர்கள் கல்வியை இப்படி வணிகப் படுத்துகிறார்களே. ஏன்?

உழைக்கும் ஜனத்திரளும், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளும் கல்வி பெற்றுவிட்டால் தாங்கள் சொகுசாக இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு என்ன? 
by

சனி, 16 பிப்ரவரி, 2013

லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகங்கள் !


லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகங்கள் !
DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
HEADQUARTERS,
NCB, 21-28, P S Kumarasamy Raja Salai, 
Raja Annamalai Puram, 
Chennai-600 028.
Phone : (044) 24615929, 24615949 & 24615929
Fax : (044) 28293264
———————————————–
SPECIAL INVESTIGATION CELLS
Inspector General of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam,
Chennai – 600 035.
Phone : (044) 4320031.
Fax : (044) 4320032.
———————————————-
Inspector General of Police,
Special Investigation Cell – II,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam,
Chennai – 600 035.
Phone : (044) 4322277.
Fax : (044) 4320032.
——————————————————-
Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam,
Chennai – 600 035.
Phone : (044) 4320032.
Fax : (044) 4320032.
———————————————————-
Superintendent of Police,
Special Investigation Cell – II,
Vigilance and Anti-Corruption,
474, First Floor, E.V.R.Building,
Nandanam,
Chennai – 600 035.
Phone : (044) 4323191.
Fax : (044) 4320032.
——————————————————–
The Superintendent of Police,
Central Range
Additional Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai Special Unit – I,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai – 600 020.
Phone : (044) 4455090
———————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City – I,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai – 600 020
Phone : (044) 4455091
————————————————————
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City – II,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai – 600 020
Phone : (044) 4455089
——————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai Special Unit – III,
# 18, First Canal Cross Street,
Gandhi Nagar, Adyar,
Chennai – 600 020
Phone : (044) 4455090
——————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 28, Bangaru Amman Colony, Ellappan Nagar,
Kancheepuram – 631 501.
Phone : (04112) 22139.
————————————————————-
Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 168, Dr.Radhakrishnan Road,
Tatabad,
Coimbatore – 641 012.
Phone : (0422) 498501.
———————————————————–
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 168, Dr.Radhakrishnan Road,
Tatabad
Coimbatore – 641 012.
Phone : (0422) 498501.
——————————————————
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 2, Ranganathan Street,
Karungalpalayam,
Erode – 638 003.
Phone : (0424) 210898.
————————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Villa Dawn, Havelock Road,
The Nilgiris – 643 001.
Phone : (0423) 43962.
————————————————————–
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B/3, Rajaji Road, Swarnapuri,
Salem – 636 004.
Phone : (0427) 448735.
———————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Salem Special Unit,
# B/3, Rajaji Road, Swarnapuri,
Salem – 636 004.
Phone : (0427) 448735.
———————————————————–
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 30-A, Ramasamy Gounder Street,
Kamala Lakshmi Colony,
Dharmapuri – 636 701.
Phone : (04342) 60042.
————————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 268-E, Periyar Nagar,
Krishnagiri – 635 001.
Phone : (04343) 31345.
—————————————————————
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 16, Neeli Godown Street,
Vellore – 632 001.
Phone : (0416) 220893.
———————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 76, Logambal Koil Street,
Seetharam Nagar,
Cuddalore – 607 001.
Phone : (04142) 30216
——————————————————-
Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 24, Kamala Second Street,
Chinna chokkikulam,
Madurai – 625 002.
Phone : (0452) 531395.
———————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 24, Kamala Second Street,
Chinna chokkilulam,
Madurai – 625 002.
Phone : (0452) 531395.
——————————————————
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 56, First Street,
Narayana Nagar,
East Govindapuram,
Dindugal – 624 007.
Phone : (0451) 431508.
————————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/426-A, Om Sakthi Kovil,
Barathi Nagar,
Ramanathapuram – 623 503.
Phone : (04567) 20036.
——————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 154, Kambar Street,
NGO Colony,
Virudhunagar – 626 001.
Phone : (04562) 45178.
——————————————————–
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 4, Muthusamy Nagar,
Sivagangai – 623 560.
Phone : (04575) 2222.
———————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 74, Trivandram Road,
Palayamkottai,
Tirunelveli – 627 002.
Phone : (0462) 580908.
———————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 106J/24, First Street, Millerpuram,
Thoothukudi – 628 003.
Phone : (0461) 322243.
——————————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 23/4/12-A, Chirambaranathan Street,
Ramavarmapuram,
Nagarkovil – 629 001.
Phone : (04652) 27339.
————————————————————
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
8/2, Quaid-E-Milleth Street,
Kaja Nagar,
Trichirapalli – 620 020.
Phone : (0431) 420166.
———————————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 12, Housing Unit, Rajagopalapuram,
Pudukottai – 622 003.
Phone : (04322) 22164.
——————————————————-
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B-22, First Street,
Kannan Nagar,
Thanjavur – 613 007.
Phone : (04362) 37888.
—————————————————–
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 4/67, Kumaran Koil Street,
Manjakollai,
Nagapattinam – 611 106.
Phone : (04365) 41460.—————————

வியாழன், 14 பிப்ரவரி, 2013

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் இணையப் பயன்பாடு


முன்னுரை :
நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு ஊட்டலாம், நாளை நிலவிலேயே சோறு சமைக்கலாம். இத்தகைய நவீனம் நாளும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் இணையத்தின் தன்னிகரில்லாச் சேவைகள் மற்றும் தேவைகள் பற்றியும் அதை கல்விக்கு எவ்வகையில் பயன்படுத்தலாமென்பது பற்றியும் குறிப்பாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கணினியில் தமிழ் மொழியின் தாக்கம் மற்றும் ஆளுமை…….
கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், காகிதம் என பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்ற தமிழ் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதன் விளைவுதான் இன்று நாம் இங்கு ஒன்று கூடி விவாதிக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. 1980ம் ஆண்டு முதல் கணினியில் இடம் பெறத் துவங்கியது தமிழ். 1995ம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய 17 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தச் சூழலில் அதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணைக் கருவியாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது கணினித் தமிழே தனித் துறையாக வளர்ந்து வருகிறது. ஆங்கில வழியாகக் கற்ற கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் மெல்லத் தமிழில் நுழைந்து தொழில் நுட்பங்களைத் தமிழ்ப் படுத்தித் தமிழ் இணையத்தை வலுப்பெறச் செய்து வருகின்றனர்.
இணையத்தில் தமிழ் இன்று ஆட்சி செய்து வருவதால் எளியவரும், வறியவரும், மொழி ஆளுமை அற்றவரும் கூட இன்று உலகம் முழுமைக்கும் இருந்த இடத்திலிருந்தே பயணிக்க முடிகிறது. இன்றைய இணைய உலகால் தமிழ்ப் பயன்பாடு, கலாச்சாரம் உலகம் முழுதும் மிக விறைவாக பரவி வருகிறது. தமிழில் உள்ள வலைத் தளங்கள் வாயிலாக தமிழர் செய்திகளை அறிந்து கொள்ளவும், பல்லாயிரக் கணக்கான தமிழ் நூல்களைப் பெறவும், இணையத் தமிழ் இதழ்களைப் படிக்கவும், தமிழிசையைக் கேட்கவும், தமிழ்க் காணொலிகளைக் காணவும் முடிகின்றது. மொத்தத்தில் தற்கால தகவல் தொழில் நுட்ப உலகில் தமிழைத் தழைக்கச் செய்ய வேண்டிய முயற்சிகள,  செயல்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதே உண்மை நிலை.



கணினி மூலம் கல்வி வளர்ச்சி…………
மற்ற எல்லாத் துறைகளையும் போலவே இணையம் கற்றல் கற்பித்தலிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பழைய மரபு வழி சார்ந்த கற்றல் கற்பித்தல் முறைகள் பலவும் தற்போதைய வகுப்பறைகளில் மாறி நவீனமான புதிய  முறைகள் இடம் பிடித்துள்ளன. இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும் மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு, விரிவு, பயன்விளைவு, கவர்ச்சி, மனமகிழ்வு, பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்வி முறை இன்றைய காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. மேலும் கற்றல்  கற்பித்தலுக்கு உதவும்  வகையில் பல வகையான இணைய வசதிகள், செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள் முதலியவை தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.

தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப்பள்ளி தொடங்கி உயர் கல்விக் நிறுவனங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இத்தகையச் சூழலில் கற்றல் கற்பித்தலில் இணையமும், இணையம் சார்ந்த வசதிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டன எனலாம். கோலின்சு என்பார் 1996 – 97 ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் தடம் பதித்து விட்டது என்கிறார். இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் இன்று மிகவும் புகழ் பெற்றதாகவும் எல்லோராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது.

இணையத்தில் தமிழ்……….
தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் கொண்டேவருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய வசதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. மழலையர் கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணைய உலகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் முதலான அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிப் கல்வி வரையில் இணையத்தில் படிக்கக் கூடிய வசதிகள் தற்போது உள்ளது. இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகு முறைகளோடு கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அவ்வகையில், தமிழ் கற்றல் கற்பித்தலுக்குப் பங்களிக்கும் இணைய வசதிகள் குறித்து பார்த்தோமேயானால், இணையம் இன்று ஒரு பல்லூடகக் கருவியாக வளர்ச்சி பெற்று  இருக்கின்றது. எழுத்துரு, படங்கள், அசைவுப் படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி-ஒளி காட்சிகள், இணைய உரையாடல், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சி எனப் பன்முகப் பயன்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இவை அனைத்தும் தற்கால நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றவை மட்டுமல்ல எளிமையாகப் பயன்படுத்தக் கூடியவை. இவ்வாறு பல்லூடகமாகச் செயல்படும் இணையத்தில் உள்ளவற்றை கணினியில் சேமித்து வைத்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. அதே போல், நம்மிடம் உள்ளவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் உள்ள கணினிப் பயனாளர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. இப்படியான, அரிய வாய்ப்பினைத் தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய ஆற்றலும் திறமும் ஆகும்.


இணைய வழிக் கல்வி……….
இணையம் வழி கற்றல் கற்பித்தல் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. பல்வேறு விதமான கல்வி மேம்பாட்டு செயல்கள் நிறைவு பெற இயலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை …………….
*              பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது.
*              ஓர் குறிப்பிட்ட தலைப்பிலான பாடத்தை பற்றிய கூடுதல் தகவலை அறிந்து     கொள்ளும் வகையில் இணைப்புகளைப் பயன்படுத்தலாம்.
*              எல்லா மாணவர்களும் ஒரே விதமான பாடத்தை படிக்க வேண்டிய கட்டாம் இல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது
.*             மாணவரை மையமாகக் கொண்ட பாடத்திட்டத்தை வகுக்கலாம்.
*            மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கவும் பல புதிய சிந்தனைகளை வெளிக்காட்டவும் பயன்படுகிறது.
*              எழுத்து (text),  ஒலி (sound),  காட்சி (visual),  அசைவுப்படம் (graphics), நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor),  இருவழித்தொடர்பு (interactive) எனப் பல வகையில் கற்பதற்குறிய வாய்ப்பு கிடைக்கின்றது.
*              மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்திடவும் அவற்றை அளவிடவும் இம்முறை சிறப்பானது.
*              மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி  ஆய்வு மனப்பான்மையை வளர்க்கிறது.
*              கற்பதற்குறிய குறிப்பிட்ட காலமோ, இடமோ, தக்க சூழலோ தெவையில்லை.
*              தேவையான  அனைத்து தகவல்களையும் விரைவாகவும், விரிவாகவும் பெற முடிகின்றது.
*              கற்றலில் ஏற்படும் சந்தேகங்களை பல முனைகளிலிருந்தும் ஆய்ந்து, கேட்டறிந்து தாமே தீர்வு காணும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
*              தாம் கற்றதை தாமே மதிப்பீடு செய்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் இணைய அறிமுகம்…….
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் கணிணியை கண்ணால் காண்பதே மிகப்பெரிய அதிசயம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தமட்டில் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேநிலைப் பள்ளிகளிலும் கணிப்பொறிகள் பயன்படுத்தும் வசதி கிடைத்து விட்டது. ஆம், அனைத்து பள்ளிகளிலும் மேசைக் கணிணிகளும், மடிக் கணிணிகளும் உள்ளது. அவற்றைக்கொண்டு இன்று இணைய அறிமுகத்தை மேற்கொண்டால் நாளைய உலகம் நம்கையில் என்பதற்கேற்ப இன்றைய இளைய தலைமுறை மிக வேகமாக இத்துறையில் முன்னேற்றம் காண வழி கிடைக்கும்.  இதன்மூலம் உலக அரங்கில் இணைய பயன்பாடு என்பதே கோலோச்சும்.

துவக்க/நடுநிலைப் பள்ளிக் கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு……….
இன்று கல்வி என்பது வெறும் பாட அறிவு என்பதில் இருந்து வேறுபட்டு உலகியல் அறிவை வளர்ப்பதோடு அன்றாட நடைமுறைச் செய்திகளையும் புதுப்பித்துக்கொள்ளத்தக்க வகையில் அமைய வேண்டும் என அனைவரும் எதிர் நோக்குகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே இன்று அரசானது துவக்க/நடுநிலைக் கல்வி கற்பித்தல் முறையை 1 முதல் 4 வகுப்பு வரையில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SIMLIFIED ACTIVITY BASED LEARNING) என்றும், 5 ஆம் வகுப்பு எளிய படைப்பாற்றல் கல்வி (SIMPLE  ACTIVE LEARNING METHODOLOGY) என்றும், 6 முதல் 8 வகுப்பு வரையில் படைப்பாற்றல் கல்வி (ACTIVE LEARNING METHODOLOGY)  என்றும் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. இச் சூழலில் வெறும் பாடபுத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் அது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பொய்த்துப்போகச் செய்துவிடும்.

இச்சூழலில்தான், நமக்கு கைகொடுக்கும் புதியமுறை இணைய வழிக் கற்றல்/கற்பித்தல் ஆகும். அனைத்து பள்ளிகளிலும் இணைய வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது ஆசிரியர்கள் தமது அறிவாற்றலை உயர்த்திக்கொள்ளும் அதே வேளையில் மாணவர்கள் நாளும் பல புதியச் செய்திகளையும், கற்றல்  அனுபவக்களையும் பெற வாய்ப்பு ஏற்படும். மேலும் நடுநிலைக் கல்வி பெறும் வயது என்பது (6 முதல் 8 வகுப்புகள்) 10 முதல் 14 வரையானது இக்காலக்கட்டம் மாணவர்கள் எதையும் விளையாட்டு வழியில் எளிமையாகக் கற்கும் காலம் இக்காலகட்டத்தில் கற்கும் எதையும் தம் வாழ்நாளில் மறத்தல் இயலாது. எனவே இப்பருவத்தில் இணையவழிக் கல்வியை அறிமுகம் செய்யும் போது அது மிகு பயனை விளைவிக்கும். மேலும் இக்கல்வி முறையை தொடர்ந்து பின்பற்றும் மாணவன் ஓர் குறிப்பிட்ட காலகட்டத்தில், ”தானே கற்றல் ” (SELF LEARNING) முறைக்கு மாறிவிடுவான்.

தமிழ் இணையக் கல்விக் கழகம் அறிமுகம்……….
மேற்காண் இணைய கற்றல் முறையை ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்திட பெரும் உதவியாக அமைந்ததுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். இதில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள ஓர் மாணவன் துவங்கிவிட்டாலே அவனுக்கு கற்பித்தலுக்கு ஆசிரியர் துணை தேவைப்படா. ஆம், காரணம் அதில் உள்ள நூலகம்,  இணைய வகுப்பறை, அகராதிகள், கலைச் சொற்கள், சுவடி காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என உள்ள பல்வேறு வசதிகள் இணையத்தை பயன்படுத்தும் அனைவரையும் கவரும்.

தமிழ் இணையப் கல்விக் கழகம் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் எளிதில் தமிழை அடிப்படை அரிச்சுவடியில் துவங்கி முதுநிலை பட்டப் படிப்பு வரையில் பயில இயலும். இத்தளத்தில் காணும் நூலகம் சென்றால் அங்கு காணும் ஆயிரக்கணக்கான நூல்கள் மிக அரிதானவை இந்த நூலகத்தை இதுவரையில் பார்வையிட்டவர்கள் 2,78,145 பேர் (04.1.2012 வரையில்) ஆவர்.

கல்விக்கான சில இணைய தளங்களும் அவற்றின் சேவைகளும்……….
தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் பல இணையத் தளங்கள் உள்ளன. தமிழை முதல் மொழியாகக் கற்பதற்கும்,  இரண்டாம் மொழியாகக் கற்பதற்கும் இணையத் தளங்கள் வந்துவிட்டன. அதுமட்டுமல்லாது,  ஆங்கிலம் உள்ளிட்ட பல அயல் மொழிகள் சார்ந்தோரும் தத்தம் மொழி வழியாகத் தமிழ் கற்றல் என்பது இன்று மிக எளிதானதாக உள்ளது. முறையாக வடிவமைக்கப்பட்ட கலைத் திட்டங்கள், பாடங்கள் ஆகியவற்றை இணையத்திலேயே படிப்பதன் வழியாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் மொழிக் கற்றலுக்கு மிகச்சிறந்த முன்னோடியாகத் திகழ்வதை மறுக்க இயலாது.  அதுபோல, உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ்க் கல்விக் கழகங்கள் அல்லது கல்விக் கழகத் தமிழ் இருக்கைகள் இணையம் மூலமாகத் தமிழ்க்  கல்வியை கற்பித்து வருகின்றன.

தமிழ்க் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் அதிக அளவில் இருக்கின்றன. இவை கற்றல் கற்பித்தலுக்கு பயன்படக் கூடிய பல்வேறு கற்றல் மூலங்களை (Veries Learning Sources) வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது கற்றல் கற்பித்தல் தொடர்பான வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கி செயல்படுத்திடவும் இவை பெரும் வாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றன.  அதிகம் விலை கொடுத்து மிகப்பெரிய அளவிலான கலைக் களஞ்சியங்கள்,, அகரமுதலிகள் ஆகியவற்றை வாங்கிச் சேமித்து வைக்க வேண்டிய வேலையோ அல்லது எங்கு சென்றாலும் அவற்றைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியமோ இல்லா நிலையில் இன்று இருக்கும் இடத்திலேயே விரல் நுனியில் விவரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பினை இணையம் வழங்கிக்கொண்டிருக்கிறது.

இது தவிர தமிழ் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்‌ஷனரி ஆகியன இணைய வழிக் கற்றலுக்கு மிகவும் பயன்தருவனவாகும். தமிழ் விக்கிபீடியாவில் இன்று வரையில் 49,688 (04.12.2012நாளின் படி) கட்டுரைகள் வலையேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ் விக்ஷனரியில்  2,75,283 (04.12.2012நாளின் படி) கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கல்வி வளர்சிக்கு உதவிடும் சில இணைய தளங்கள்
*              www.tamilvu.org
*     www.tamil.net

எல்லோருக்கும் இணைய வழிக் கல்வி………..
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது அந்நாட்டில் வெளிப்படும் புதிய படைப்பாற்றல். மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கக் கணினி மென்பொருள் வசதியுடன் கூடிய மொழிப் பயிற்று முறை அனைத்து வகுப்பறைகளிலும் கொண்டுவரப்படல் வேண்டும். அன்றைய ஓலைச்சுவடி முதல் இன்றைய இணையம் வரை தகவல் பகிர்தலின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக் காட்ட வேண்டும். தமிழில் கற்பிக்க மிகமிக எளிமையான சொற்களையே பயன்படுத்துதல் வேண்டும். கற்பவருக்குக் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்திட்டங்களும் பாடப்பொருளும் அமையப் பெறல் வேண்டும்.
முடிவுரை :
நேற்றைய உலகம் இருண்டு கிடந்தது, இன்றைய உலகம் வெளிச்சமாக இருக்கிறது. நாளைய உலகம் பிரகாசமாக இருக்க வேண்டும். அதற்குத் தேவை அனைவருக்கும் தரமான அடிப்படை கல்வி. அதை இணையம் வழி இனிதே வழங்குவோம்! இன்சுவைக் கனிகள் பலவும் புசித்து மகிழுவோம்.
 கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை – 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in
                     http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

1. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் – தமிழ்நாடு அளவில்

கிராமப்புற மாணவர்களால் தமிழை வாசிக்க முடியாத நிலை; அதிர வைக்கும் ஆய்வு! தமிழ்நாட்டின் அவல நிலை


அன்று விடுமுறை நாள். தேவியும், ராமுவும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மரத்தடியிலிருந்து ஒரு அணில்குட்டி தொப்பென்று கீழே விழுந்தது. இருவரும் அணில்குட்டியை எடுத்து அப்பாவிடம் கொடுத்தனர்.
அப்பா அதற்கு பஞ்சால் பாலூட்டினார். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தார். சிறிது நேரம் கழித்து அணில்குட்டி அங்கும் இங்கும் ஓடியது. தேவியும், ராமுவும் அணில்குட்டியை வளர்க்க விரும்பினர். ஆனால், அப்பா அணில்குட்டியை அதே மரத்தடியில் விட்டுவிட்டார்.’
இந்த இரண்டாம் வகுப்புக்குரிய கதையை, தமிழகக் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 70.1 சதவிகிதத்தினரால் திக்கித் திணறிக்கூட வாசிக்க முடியாத நிலை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? – இந்தக் கல்வி அவல நிலையை நம்பித்தான் ஆகவேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாவட்டங்களில் 2005-ல் இருந்து ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள், அசர் (ASER) – கல்விநிலையின் ஆண்டறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது.
tamilnadu
‘பிரதம்’ என்ற தன்னார்வ கல்வி அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வின்போது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனரா? கிராமப்புற பள்ளிகளின் அடைப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பன பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் அடிப்படைக் கற்றல் திறன் ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் முடிவில் கிடைத்தத் தகவல்களில் பெரும்பாலானவை அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள் இவை…
* தமிழகக் கிராமப்பகுதிகளில் 6 முதல் 14 வயதுள்ள 99.4 சதவிகித குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர்.
* 11 முதல் 14 வயதுள்ள பெண்குழந்தைகளில் 99.1 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர்.
இவ்விரண்டு அம்சங்களிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.
தமிழ் வாசிப்பின் (அவல) நிலை:
* ஒன்றாம் வகுப்புப் படிக்கும் 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எழுத்துகளை அடையாளம் காண முடிகிறது.
* இரண்டாம் வகுப்புப் படிக்கும் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.
* ஐந்தாம் வகுப்புப் படிக்கும் 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே இரண்டாம் வகுப்பு கதையை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 46.8 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கணக்கும் பிணக்கு:
* ஒன்றாம் வகுப்பில் 53.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஓரிலக்க எண்ணை (1 முதல் 9 வரை) அடையாளம் காணமுடிகிறது.
* இரண்டாம் வகுப்பில் 54.2 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஈரிலக்க எண்களை (11 முதல் 99 வரை) அடையாளம் காண முடிகிறது.
* ஐந்தாம் வகுப்பில் 13 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எளிய வகுத்தல் கணக்கைப் போடமுடிகிறது.
ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, தேசிய கணித ஆண்டு கொண்டாடப்பட்ட வேளையில் தமிழக அளவில் மட்டும் அல்ல… இந்திய அளவிலும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கணக்குப் பாடத்தில் நல்ல கற்றல் நிலையை எட்ட முடியவில்லை என்பது துயரத்துக்குரிய நகைமுரண்.
ஆங்கிலம் ‘ஓகே!’:
* தமிழகத்தில் ஆங்கிலத்தில் எளிய வார்த்தயை வாசிக்க முடிந்த குழந்தைகளின் சதவிகிதம், இந்தியாவின் சராசரியை விட அதிகமாகக் காணப்படுகிறது.
* ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 57.1 சதவிகித தமிழகக் குழந்தைகளால் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48 சதவிகிதமாகவே உள்ளது.
கல்வி உரிமைச் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதையும் அசர் ஆய்வு முடிவுகள் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்:
* 49.3 சதவிகித பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது.
* 81.7 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் – வகுப்பறை விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது.
* 80.8 சதவிகித பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது.
* 66.1 சதவிகித பள்ளிகளில் முழுமையான சுற்றுச்சுவர் உள்ளது.
* 68.9 சதவிகித பள்ளிகள் மட்டுமே கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.