வியாழன், 31 ஜனவரி, 2013

செயல்வழிக் கற்றல் முறையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

செயல்வழிக் கற்றல் முறையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
நாமக்கல், : செயல்வழிக் கற்றல் முறை யால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் எருமப்பட்டி வட்டார கிளை செயலாளர் ராமராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
கடந்த 2007ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறைநடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தேர்வு மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை இல்லை. குறிப்பிட்ட நிலையை மாணவர்கள் கடந்தால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல முடியும். இதன்மூலம் மாணவர்களது வாசிப்பு திறன் குறைந்தது. இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்ப டுத்தியது.
அதனால், கிரா மப்பு றங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். தற்போது, புத்தக வழிமுறை இருந்தாலும் செயல்வழிக் கற்றல் உபகரணங்களும் துவக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இது துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கு காரணமாக அமைகிறது.
கடந்த சில ஆண்டுக்கு முன், கிராமப்புற பள்ளியில் மாணவர்களுக்கு மருத் துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த நடைமுறை இல்லை. அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். மேல்நிலை வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்க அரசு நடவ டிக்கை எடுத்தால் அரசுப் பள்ளிகளில் மாண வர் சேர்க்கை விகிதம் அதி கரிக்கும்.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.பாரதி ... யார் ?

செயல்வழிக் கற்றல் வேண்டாம்


Dinamani

First Published : 20 September 2009 05:34 AM IST
 சேலம், செப். 19: தமிழக பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் செயல்வழிக் கற்றல் முறைக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 இக் கூட்டணியின் சேலம் மண்டல கோரிக்கை மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.சந்திரசேகர் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் இரா.சுப்பிரமணியன், நாமக்கல் க.நடராஜன், தருமபுரி இரா.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்டச் செயலர் ம.பூபதி வரவேற்றார். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென்னிந்தியச் செயலர் வா.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
 பதவி உயர்வுக்கு இதுவரை நடைமுறையில் வழங்கி வந்ததைப் போல் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
 செயல்வழிக் கற்றல் முறையால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. எனவே இந்த முறையை கைவிட்டு விட்டு, பாடநூல் வழி கற்றல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி - கேள்விக்குறியாகும் தலித் மாணவர்களின் நிலை அழகிய பெரியவன்


Dalithmurasu
மே 2009

அடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி - கேள்விக்குறியாகும் தலித் மாணவர்களின் நிலைஅழகிய பெரியவன்
போர் முனையின் முன்வரிசையில் இருப்பவர்களைப் போல, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக வட்டத்தின் விளிம்பில் இருக்கின்றனர். வட்டத்துக்குள் எது ஊடுறுவினாலும் முதல் அடி தலித்துகளுக்கே விழுகிறது. தூக்கிவிட ஆளின்றி அவர்கள் அரற்றிக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் மய்யம் நோக்கி நகர்கிறது.மய்யத்தில் இருப்பவர் அடிபடும்போது வேகம் குறைந்திருக்கிறது. சொல்லப் போனால், அவர் வெறுமனே சீண்டத்தான் படுகிறார். மேலும் அங்கிருப்பவர் விழுந்தாலும் தூக்கிவிட ஆட்களிருக்கிறார்கள்.

வறுமை, பஞ்சம், இயற்கையழிவு, போர், அரசின் திட்டங்கள் என எல்லாமே தலித்து களைத்தான் முதலில் பதம் பார்க்கின்றன. தமிழக அரசு, ‘அனைவருக்கும் கல்வி' (SSA) திட்டத்தின் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தி வரும் ‘செயல்வழிக் கல்வி' (ABL), ‘படைப்பாற்றல் கல்வி' (ALM) ஆகிய திட்டங்கள் அப்படித்தான் தலித் மாணவர்களைப் பதம் பார்த்து விடுமோ என்ற கவலையும் அச்சமும் இன்று பரவலாக எழுந்துள்ளது.

Village Schoolஏற்றத் தாழ்வுடையதும் சமமற்றதுமான இந்தியச் சமூகத்தில் – தலித் மக்களுக்கும், சூத்திரர்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. கி.பி. 1030இல் இந்தியாவுக்கு வந்து சென்ற பயணி அல்பெருனி, கல்வி பயில முயன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுந்தண்டனைகளை நேரில் பார்த்து குறித்திருக்கிறார். இந்த நிலையின் உக்கிரம் படிப்படியாய்க் குறைந்தாலும் பாகுபாடு நிலவியபடியேதான் இருந்தது. இன்றும் அதன் எச்சங்கள் மறைமுக வழியில் தொடர்கின்றன.

விடுதலைக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள், தலித்துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கவிஞர் கம்பீரன் தனது கவிதையொன்றில் குறிப்பிடுவது போல, பொருத்தமில்லாத முயல் ஆமை ஓட்டப்பந்தையமாகவே பெரும்பாலானவை இருந்தன. தலித்துகள் ஆமைகளைப் போல நகர்ந்து கொண்டிருந்தார்கள். கல்வித் துறையில் அப்படித்தான் இன்றும் முன் நகர்ந்தபடி இருக்கிறார்கள். கல்வித் திட்டங்கள் அவர்களைக் குறித்த கரிசனையற்று இருந்தாலும் அவர் தம் முன் நகர்வு தொடர்கிறது.

கல்வியை அனைவருக்கும் தர வேண்டும் என்பது அவசியமானதுதான். ஆனால் பெறுகிறவர்களின் நிலைக்கு ஏற்ப அதை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது. கல்வியைப் பொருத்தவரை, தலித் அல்லாத பிறருக்கு இன்று வழங்கப்படுவது மறுசோறுதான்! அவர்கள் ஏற்கனவே வரிசையில் இடம் பிடித்து தின்று கொண்டிருக்கிறார்கள். தலித்தோ இப்போதுதான் முதல் கவளத்தையே உண்கிறான்.

முதன்முறையாக, முதல் தலைமுறையாக பள்ளியில் நுழையும் தலித் மாணவரை – அடிப்படைக் கல்வியின் அடைவுத் திறன் அற்றவராக இன்றைய செயல்முறைக் கல்வியும், படைப்பாற்றல் கல்வி யும் மாற்றிவிடுமோ என்ற அய்யம் உருவாகியுள்ளது. தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் பள்ளி மாணவர்களிடையே மிகக் குறைந்த அளவிலான கற்றல் திறனே உருவாகியிருக்கிறது என்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இரு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சுமார் 29 மாவட்டங்களில், 870 கிராமங்களில் படிக்கும் 31,000 மாணவர்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட’ஆண்டிறுதி கல்வி அறிக்கை' – ASER 2008 மற்றும் கல்வியாளர் வசந்தி தேவி தலைமையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஆகிய இரண்டுமே இந்த அவல நிலையைச் சொல்கின்றன.

தமிழகத்தில் ஒன்று, இரண்டு வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களில் 54.7 சதவிகிதத்தினர் மட்டுமே எழுத்துகளைப் படிக்கும் திறன் பெற்றுள்ளனர். ஆனால் தேசிய அளவிலான சராசரியோ 75.4 சதவிகிதம் ஆகும். மூன்று முதல் அய்ந்து வகுப்பு வரையுள்ள மாணவர்களில் 45.7 சதவிகிதம் பேர்தான் தமிழில் எளிய பாடப் பகுதிகளைப் படிக்கின்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், இவ்வகுப்புகளின் தேசிய வாசிப்பு நிலை 66.6 சதவிகிதம் ஆகும். கணிதப் பாடத்தில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த 62.6 சதவிகிதத்தினர் மட்டுமே எண்களைப் புரிந்து கொள்கின்றனர். மூன்று முதல் அய்ந்து வகுப்பு களைச் சேர்ந்த 36.3 சதவிகித மாணவர்கள் மட்டும்தான் கழித்தல் போன்ற கணித செயல்பாடுகளை செய்கின்றனர் என்கிறது, ASER 2008 ஆய்வு.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வியாளர் வசந்தி தேவி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் எளிய தமிழ்ப் பத்தி ஒன்றை வாசிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். கணிதத்திலும் இதே அவல நிலைதான். இத்தகு ஆய்வறிக்கைகளை மட்டுமே சார்ந்திராமல் ஆசிரிய நண்பர்களின் வட்டத்தில் விசாரித்தறியும் போதும், இதே வகையான அவல செய்திகள்தான் கிடைக்கின்றன. சராசரியாக இருபத்தைந்திலிருந்து எண்பது மாணவர்கள் வரையிலான எண்ணிக்கைகளைக் கொண்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் – பாதிப் பேர்தான் நன்கு வாசிக்கவும், கணித செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் பெற்று இருக்கிறார்கள். வகுப்புக்கு ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் ஓரளவு திறன் பெறுகிறார்கள் என்று அவர்கள் தரும் செய்திகள் சொல்கின்றன.

செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற கல்வி முறைகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன. ஆந்திர மாநிலம் ரிஷிவேலியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி நிறுவிய பள்ளிகளில் இக்கல்வி முறை இருந்தது. அதைப் பார்த்து முன்னாள் கல்வி இயக்குநர் விஜயகுமாரால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் 2003இல் சென்னையில் உள்ள 13 பள்ளிகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் 264 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இது, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கு முன்பிருந்த மாணவர் கற்றல் அடைவு நிலை, மேற்சொன்னபடியும்கூட இருந்திருக்கலாம். அந்த நிலை நீடிக்காத வண்ணம் இவ்விரு புதிய கல்விமுறைகளும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறைகள் கற்றல் அடைவுத் திறனைப் பின்னுக்கு இழுத்துள்ளதோடு, அந்த நிலையை மேலும் மோசமாக்கும்படி செய்திருக்கின்றன. இதற்கு இக்கல்வி முறை காரணமாக இல்லை; செயல்படுத்துவதில்தான் தொய்வு ஏற்பட்டிருகிறது என்று பல கருத்துக்கள் வருகின்றன. ஆயினும் நடப்புச் சூழலை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவில் சாதிய முறை நிலைப்பெற்ற பின்னர் அனைவருக்கும் கல்வி மறுக் கப்பட்டது. சம்புகனின் கதையும், ஏகலைவனின் கதையும், கர்ணனின் கதையும் அக்காலச் சூழலை கண் முன் நிறுத்துகின்றன. பவுத்தமும், சமணமும் கோலோச்சிய காலத்தில் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பு ஓரளவு இருந்தது. அம்மதங்கள் பார்ப்பனியத்தால் அழிக்கப்பட்டதும் அவ்வாய்ப்புகள் பறிபோயின. ஆனால் எச்சூழலிலும் பார்ப்பனரும், சத்திரியரும் படித்தே வந்தனர். முகலாயர்களின் வருகைக்குப் பிறகு இங்கே மக்தாபாஸ், மதராசா ஆகிய மத மற்றும் பொதுப்

பள்ளிகள் வந்தன. பார்ப்பன குருகுலப் பள்ளிகளோடும், இடைச் சாதி திண்ணைப் பள்ளிக் கூடங்களோடும் இவ்விரு பள்ளிகள் சேர்ந்ததும் கல்வி பரவலானது. வெள்ளையர்கள் வருகைக்குப் பிறகு கல்வியைச் சுற்றியிருந்த சாதி, மத வேலிகள் அகற்றப்பட்டன. 1813இல் வெளியிடப்பட்ட ‘சார்டட்' அறிக்கை தொடங்கி, 1986இல் வெளியான தேசிய கல்விக் கொள்கை வரை எண்ணற்ற மாற்றங்கள் உருவாயின.

‘‘தொடக்கக் கல்விக்குப் பிறகு தீண்டத்தகாதவர்கள் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம். அவர்கள் தமது சாதிக்கு ஏற்ற கைவினைத் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும். உயர் கல்வியை அவர்களுக்கு அளிக்காததன் மூலம் தீண்டத்தகாதவர்கள் தமது தொழிலைத் தொடர்வார்கள்'' என்று பேசிய பாலகங்காதர திலகரைப் போன்ற பார்ப்பனர்கள்தான் 2000இல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை பெருமிதத்தோடு அறிமுகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் இதை ‘பிராயச்சித்தம்' என்று நினைத்திருக்கலாம். ஆனால் அது புலே, அம்பேத்கர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட காலத்தின் பக்குவம்; காலத்தின் நெருக்கடி!

தமிழகத்தில் இன்று 63 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. 1,75,000 ஆசிரியர்கள் அவற்றில் பணி புரிந்து வருகிறார்கள். 51,807 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. 35,000 சுயநிதிப் பள்ளிகள் இருக்கின்றன. கல்வி இன்று பரவலாகி இருக்கிறது. தலித் மக்களுக்கு கல்வி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகள் அரசுப் பள்ளிகளில் பெருகியுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், ஓர் ஆண்டுக்கு 11,000 கோடியை கல்விக்கென செலவழிக்கிறது. மாணவர் சேர்க்கை குறைவு என்ற புகார்களும் இன்று இல்லை. தமிழகத்தில் 6 முதல் 14 வரையிலான வயதுடைய குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை விகிதம் 99.4 சதவிகிதமாகும். இவ்வளவு இருந்தும் கற்றல் அடைவு பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆய்வறிக்கையில் சுட்டப்படும் கிராமப்புற ஏழை மாணவர்களில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களே அதிகம். அவர்கள்தான் பெருவாரியாக அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். பிற மாணவர்களும் வசதியுள்ளோரும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள கம்மபாளையம் தொடக்கப் பள்ளியைப் பற்றிய செய்தியொன்று அண்மையில் நாளேடுகளில் வெளியாகி இருந்தது. காமராசர் அவர்களால் 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில், இன்று மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஊரில் உள்ள பிற மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளிலே படிக்கின்றனர். இந்த அவல நிலை தமிழகத்தின் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளுக்கு வந்தால் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

இங்கு பல வகையான பாடத் திட்ட முறைகள், பல வகையான நிர்வாக முறைகள், பல வகையான கற்பித்தல் முறை என்று கல்வியின் நிலை சின்னா பின்னமாகிக் கிடக்கிறது. புற்றீசல் போல பெருகி பணம் பிடுங்கும் ஆங்கிலப் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவில்லை. எது எப்படி இருந்தும் கிராமப்புற தலித் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தரமாக இருப்பது மிகமிக முக்கியம். தரமும், அடிப்படையும் அற்ற கல்வி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடும். சமூக மாற்றம் ஏற்படாதபடி செய்துவிடும்.

கல்வியைப் பரவலாக்கும் நடைமுறைகளும் அதை வழங்கும் நடைமுறைகளும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல கல்வித் துறைக்கு விளங்குகின்றன. இவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. கல்வியைப் பரவலாக்கும் நடைமுறைகள் இன்று சிறப்பான நிலையை எட்டியுள்ளன. வழங்கு முறைகளில் தொய்வுகளும், இடற்பாடுகளும் இருந்தபடியே உள்ளன. கல்வியை மதத்தோடும் சாதியோடும் பிணைத்து இங்கே சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மேலை நாட்டு அறிஞர்கள் கல்வி வழங்கும் முறைகளை – குழந்தைகளையும் அவர் தம் உளவியலையும் மய்யப்படுத்தி சிந்தித்தனர். ரூசோ, மாண்டிசோரி, புரோபல், ஜான் டுவே என்று அச்சிந்தனையாளர்களின் வரிசை நீள்கிறது.

பிரம்படிப் பாடமும், பாராயணமும் இங்கு நிலவியபோது அங்கே குழந்தைகளை மய்யப்படுத்திய கற்றல் முறைகள் உருபெற்றன. மாண்டிசோரி பள்ளிகள், மழலையர் பூங்காக்கள் போன்றவையெல்லாம் அப்படி உருவானவைதான். இன்று கற்றல் கற்பித்தல் முறையில் பல்வேறு கருத்தாக்கங்கள் வந்துவிட்டன. 12–க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. ஆசிரியர் நூலில் இருந்து ஒரு எழுத்தையும் மீறாமல் மாணவர்களை பொம்மைகளாய்ப் பாவித்து, அடித்து உதைத்து கற்றுத் தந்தது எல்லாம் மலையேறி விட்டது. மாணவர்களை அவர் தம் மனநிலை மற்றும் விருப்பமறிந்து கற்கச் செய்வதுடன், அவர்களுக்கு வழி காட்டுநராக மட்டுமே செயல்பட்டால் போதும் என்ற நிலை இன்று வந்துள்ளது.

செயல் வழிக்கற்றல் என்பதும் படைப்பாற்றல் கல்விமுறை என்பதும் இவ்வகையான நவீன கற்றல் கற்பித்தல் முறைகள்தான். இவ்விரு முறைகளும் நவீன கல்வியியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கூட்டு கற்பித்தல் முறையாகும். இவற்றில் பல கற்றல் செயல்பாடுகள் உள்ளன. செயல்வழிக் கற்றல், ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. படைப்பாற்றல் கல்வி அய்ந்து முதல் எட்டு வகுப்பு களில் செயல்படுத்தப்படுகிறது. செயல்வழிக் கற்றலில் மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடும், பிற மாணவர்களின் உதவியோடும் பல வகையான அட்டைகளைக் கொண்டு தானே கற்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலான அட்டைகள் உண்டு. பாடவாரியாக கற்றலுக்கு உதவும் படங்கள் உண்டு. வருகைப் பதிவேட்டைக் குறிப்பது, காலநிலையைக் குறிப்பது, கற்றல் அட்டைகளில் இருக்கும் செயல்பாடுகளை செய்வது என மாணவர்கள் தாமே கற்கின்றனர்.

படைப்பாற்றல் கல்வியிலும் இதே வகையான செயல்பாடுகளே உள்ளன. ஆனால் புத்தகங்களே இங்கு அட்டைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் மாணவர்கள் குறிப்பிட்ட பாடப் பகுதியை தாமே படித்து புரிந்து கொள்வதோடு, அப்பாடப் பகுதி தரும் செய்திகளை தொகுத்தெழுத வேண்டும், கடின சொற்களை இனங் காண வேண்டும். அப்பாடப் பகுதியை எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் ஒரு மன வரைபடத்தையும் வரைய வேண்டும்.

மாணவர்களுக்கு அதிக சுதந்திரத்தை தருவதாகவும், அவர் தம் படைப்புத் திறனை தூண்டி விடுவதாகவும் இம்முறை உள்ளது. குழந்தை மய்யக் கல்வியான இம்முறையில் ஆசிரியர், பாடம், தேர்வு ஆகிய மூன்று ‘பூதங்க'ளின் பயத்திலிருந்து ஒரு மாணவன் விடுதலை பெறுகிறான். ஆனால் இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. செயல்வழிக்கற்றல் முறையில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் அட்டைகளை எடுத்து வருவது, அடுக்குவது, கையாளுவது போன்றவற்றிலேயே அதிகமான நேரம் கழிகிறது. கற்றல் செயல்பாட்டில் அட்டைகள் முக்கியம் என்பதால், ஒரு அட்டை தொலைந்தாலும் எல்லாமே நின்றுவிடுகிறது. ஆசிரியரும் மாணவரும் அட்டைகளை அடுக்குவதிலேயே நாட்களைக் கழிக்கின்றனர்.

மாணவர்கள் ஒவ்வொரு படிநிலைக்கும் உரிய அட்டைகளில் இருக்கும் கற்றல் செயல்பாடுகளை முடித்த பின்னர்தான் அடுத்த நிலைக்குப் போக முடியும். இதனால் ஒரு வகுப்பறையில் பல நிலைகளில் நிற்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருக்கும் கவனம் செலுத்துவது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இவ்வாறான காரணங்களால், கற்றல் செயல்பாடு தொய்வடைந்து வருகிறது. மீதிறன் பெற்ற மாணவர்கள் ஒரு நிலைக்குமேல் போய் தடுத்து நிறுத்தப்பட்டு பிற மாணவர்களுக்கு கற்றுத்தரும்படி பணிக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் படிப்பும் தடைபடுகிறது. தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், எண்ணுருக்கள் ஆகியவற்றை ஒரு மாணவர் தெளிவாக கற்றுக் கொள்ளும்போதுதான் இவ்விரு முறைகளில் சிறப்பாக செயல்பட முடியும். ஆய்வுகள் சொல்வது போல வாசிப்புக் குறைபாடு இருக்கும்போது, இம்முறைகள் மாணவர்களை மேலும் பாழாக்கி விடுகின்றன.

செயல்வழிக் கல்வியை முடித்து, படைப்பாற்றல் கல்விக்கு வரும் மாணவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது மிகமிக அடிப்படையான முன் நிபந்தனையாகிறது. ஆனால் இங்கிருக்கும் நிலையில் நிலைமை அப்படி இல்லை என்பதால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தங்கள் குழு மாணவர்களோடு பெரும்பாலான பொழுதுகளை வெட்டிக் கதை பேசி கழிக்கிறார்கள்.

கற்றல் அடைவுத் திறனில் குறைவுடைய மாணவர்களிடையே ஒன்றிரண்டு ஆண்டு இடைவெளியிலேயே அடுத்தடுத்த கல்வி முறையை அறிமுகப்படுத்தியதால், கிராமப் புற மாணவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். சொந்தமாகப் படிக்க முடியாத மாணவரால் பாடத்தில் தெளிவு பெற முடியவில்லை. பாடம் நடத்தும்படி இருந்த முந்தைய கற்பித்தல் முறையிலாவது சுமை ஆசிரியர் மேல் விழுந்திருந்தது. இப்போது பாடத்தை கற்கும் சுமை மாணவர்கள் மீதே விழுகிறது. கிராமப்புற கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு இது பெரும் சவால். முழுமையான கற்றல் திறன் கொண்டவர்களாக உருவாகாத சூழல் அவர்களை மந்தமாக்கி விடுகிறது. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், தனிப் பயிற்சி பெறும் மாணவர்களும் அதிக கற்றல் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர். இந்த வேறுபாடு சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் இடைவெளியையும் உருவாக்கி விடுகிறது.

Dalit Childrenகிராமப்புற ஏழை மாணவர்களிடையே கற்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல் ஆசிரியர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அர்ப்பணிப்பும், கடமையுணர்வும் கொண்ட ஆசிரியர்களாலேயே இன்று இருக்கும் சிறந்த நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களிலும், தலித் மக்கள் பகுதியிலும் உள்ள பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச பொறுப்புணர்வும் அக்கறையும் தேவைப்படுகிறது. பெரும்பாலான பொது மக்கள் அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்திருப்பது இதனால்தான்.

ஒடுக்கப்பட்ட மக்களிடம் கல்வி வந்து சேர்ந்ததைப் பற்றிய புரிதல் இந்த ஆசிரியர்களில் பலருக்கும் இல்லை. எஸ்.எஸ்.ஏ. மூலம் மாதத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் வீணாகக் கழிகின்றன. அங்கு பாடத்தை கற்பிப்பதில் உள்ள சவால்கள் பற்றியோ, சமூக நிலை பற்றியோ, கலை இலக்கியம் பற்றியோ எதுவுமே பேசப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு இப்போது கூடுதல் நெருக்கடியும், அதிகார கெடுபிடிகளும் சேர்ந்துள்ளதால் அவர்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியவில்லை என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் ஒருவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். ஒரு நாள் பள்ளியைப் பார்வையிட வந்த அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட அலுவலர் அவரை பள்ளி மைதானத்தில் நின்றபடி அழைத்துள்ளார். ‘என்னை ஏன் பார்க்க வரவில்லை? ABL, ALM ஆகியவற்றை ஒழுங்காக நடத்துகிறாயா?' என்றெல்லாம் கேள்விகள் கேட்டு மிரட்டியுள்ளார். வகுப்பறைகளுக்குள் வந்து பார்வையிடாமல், குறிப்பேடுகளைப் பார்வையிடாமல் இப்படி சத்தம் போட்டு விட்டு சென்றிருக்கிறார். அவர் ஓர் எசமான்; ஆசிரியர் ஓர் அடிமை என்ற கருத்து அந்த அதிகாரியிடம் இருந்திருக்கிறது. இது பல அதிகாரிகளிடம் இருக்கும் மனநிலை. மனித நேயத்துடனான உறவு அதிகாரிகள் – ஆசிரியரிடையே இல்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் பல அம்சங்கள் புள்ளிவிவரத்தைப் பெறுவதிலும், வழங்குவதிலும் மட்டுமே இயங்குவதால், அத்திட்டத்தின் பலன்கள் பிஞ்சிலேயே கருகி விடுகின்றன. வேறு சில சிக்கல்களும் உண்டு. ஒன்று முதல் அய்ந்து வகுப்புகளைக் கொண்ட பல தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் என்ற நிலையே நீடிப்பதால், அவர்களால் மாணவர்களுக்குப் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. 60 சதவிகிதம் தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியர் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. ஓர் ஆசிரியருக்கு நாற்பது மாணவர் விகிதம் என்ற நிலையையே இங்கு வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேற்கு நாடுகளில் அது 1 : 20 என்று வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர் விகிதத்தை ஒன்றுக்கு இருபது என குறைத்து அதிகப்படியான ஆசிரியர்களைப் பணியமர்த்தினால் நிலைமை வெகுவாக மாறிவிடும்.

இந்த ஆய்வுகளில் ஒன்று, வசந்தி தேவி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே அவர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் அரசு அதை வெளியிடவில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அதனிடம் இல்லை. கல்வி அதிகாரிகளும் அப்படித்தான் நடந்துக் கொள்கின்றனர். SSA, ABL, ALM திட்டங்களை விமர்சிக்காமல் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சமூகத்தில் தலைமுறை அறிவினை, எதிர்காலத்தை தீர்மானிக்கும் விசயம் இது என்பதால் அரசு இதை செவிமடுத்தே ஆக வேண்டும்.

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி முறைகளை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும்படி நெகிழ்வுத் தன்மை கொண்டதாக மாற்றுவது மிகவும் அவசியம். ஆசிரியர்கள், வல்லுநர்கள் குழு அமர்ந்து அதை செய்வது நல்லது. மொழிப்பாடங்களுக்கும், கணிதப் பாடத்திற்கும் இம்முறையிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு அளிக்கலாம். கிராமப்புறம் மற்றும் கற்றல் அடைவு குறைந்த பள்ளிகளில் இம்முறையை காலையிலோ அல்லது மாலையிலோ ஏதாவது ஒரு வேளைக்கு மட்டும் நடைமுறைப் படுத்தும்படி செய்ய வேண்டும். பிற வேளைகளில் கற்றல் அடைவுத் திறன் மேம்பாட்டுப் பணிகளை பிழையின்றி எழுதுதல், சரளமாகப் படித்தல், கணக்கு ஆங்கிலப் பாடங்களில் பயிற்சிகளை செய்தல் போன்றவற்றை கவனிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும் ABL, ALM முறைகளை அறிமுகம் செய்வது உடனடி தேவையாகும். இது, கல்வியில் தொடரும் ஏற்றத்தாழ்வை சீராக்கும்.

கல்வியின் கட்டமைப்பு வசதிகளிலும், பள்ளிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர் மற்றும் சேர்க்கை நிலையிலும், தமிழ் நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஆனால் அடிப்படைக் கல்வியைப் பெறுவதிலோ தமிழக குழந்தைகளுக்கு சிக்கல் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் எவ்வாறு முன்னகர முடியும் என்று கேட்கிறது இவ்வறிக்கைகளிலே ஒன்று. இக்கேள்வியை ஒவ்வொருவரும் கவலையோடு எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக அரசுக்கு இப்பொறுப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், அரசை நடத்துகிறவர்களின் பிள்ளைகளோ, அரசு அதிகார வர்க்கத்தின் பிள்ளைகளோ இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களின் பிள்ளைகள் யாரும் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை. ஏழை தலித்துகளின் பிள்ளைகளே அங்கு பெருவாரியாகப் படிக்கிறார்கள். அவர்களே விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலை தொடர்ந்தால், அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் தலித் மாணவர்கள் மீண்டும் அடிமை வேலைகளை செய்யவும், மாடு மேய்க்கவும், கழிவு அகற்றவும்தான் போக வேண்டியிருக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருப்பது அரசுக்கு நல்லதல்ல.  

சனி, 26 ஜனவரி, 2013

தோப்புக் கரணம் போட்டால் அறிவு வளரும்!அத்துடன் இது ஒரு வித யோகாவாக்கும்!


சைவ சமயத்தவர்கள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது.
இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார்.
அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப் பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
இதை செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் போடுது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
Memory and Concentration Improved by One Simple Exercise!
***************************************************************
A 3-minute exercise that improves poor memory, lack of concentration, clumsiness and emotional instability? You had better believe it – just watch the video and read the reports. This easy-to-learn exercise offers real help to those with learning difficulties, autism and Alzheimers disease. In fact, anyone whose memory is not as sharp as it should be can benefit from this exercise.

உணவு ஜீரணமாவது எப்படி? வீடியோ காட்சிகளுடன் முழுமையான ரிப்போர்ட் By டாக்டர்.செந்தில் வசந்த்!

நம் வாயிலே உணவைப் போட்டுக் கொள்கிறோம். திடப் பொருளானால் அதை மெல்கிறோம். திரவமானால் விழுங்குகிறோம். அது தொண்டையில் இறங்குகிறது. இந்த உணவுக்கு என்ன நேர்கிறது? ஜீரணமாதல் என்னும் நிகழ்ச்சியைப் பற்றி முழுமையாகக் புரிந்து கொள்ள முடியும்.


அத்துடன் ஒவ்வொருவரும் நல்ல உணவுப் பழக்கங்களின் தேவையை உணரவும் இந்த விவரங்கள் பயன்படும் என்ற நோக்கில் வீடியோ இணைப்பும் இணைத்துள்ளோம்:.

வாயிலே நேர்வது என்ன?
வாயிலே உணவை மெல்லும்போது அது சின்னஞ்சிறு துகள்களாக நொறுங்கி உமிழ்நீருடன் நன்றாகக் கலக்கிறது. வாயிலே எப்போதும் சுரக்கும், நிறமற்ற திரவமே உமிழ்நீர். உமிழ்நீர் வெறும் நீர்தானே என்று நினைக்கலாம். அப்படியல்ல அதிலுள்ள நுட்பமான என்ஸைம்கள் உணவை செரிக்கின்றன. உமிழ்நீரிலுள்ள என்ஸைம் பொருளாக மாற்றுகிறது.
சொல்லப்போனால். செரித்தல் என்பது இந்த இயக்கம்தான். இந்த மாற்றம் தான். எத்தனையோ விதமான உணவுப் பொருள்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வண்ணம் பலவகை என்ஸைம்கள் மாற்றுவதும், அந்தச் சத்து உடலின் தேவைக்குப் பயன்படுவதுமே செரித்தல் என்னும் இயக்கம். என்ஸைம்களை உடலின் பல உறுப்புகள் தயாரிக்கின்றன. உணவை ஜீரணிக்க ஏற்ற இடங்களில் இந்தச் சாற்றைச் செலுத்துகின்றன. கடைசியாக, செரித்ததுபோக எஞ்சிய பொருளே மலமாக வெளியேறுகிறது. ஜீரண இயக்கத்தை படிப்படியாக தொடர்ந்து பார்ப்போம்.
சாப்பிடத் தொடங்கும் போது, ஏன், நல்ல உணவு மணக்கும் போதே, வாயிலே நீர் சுரக்கிறது. வாயிலுள்ள மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரக்கிறது. இரண்டு காதுகளுக்கும் கீழ், முன்புறத்தில் ஒரு ஜோடி; கீழ்த்தாடையின் பின்புறம் ஒரு ஜோடி; நாக்கின் அடியில் மூன்றாவது ஜோடி. தினமும் நமது வாயில் சுரக்கும் உமிழ்நீர் சுமார் பத்து கப் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உமிழ்நீரிலிருக்கும் என்ஸைம், கார்போஹைடிரேட்டைப் பொடிப்பொடி யாக்கி, எளிதில் கரையும் சர்க்கரைப் பொருளாக மாற்றுகிறது என்று பார்த்தோம். உணவைக் கடித்து மென்றால். உமிழ்நீர் தன் வேலையைச் செய்ய உதவியாக இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்திரண்டு முறை – எத்தனை பற்கள் உண்டோ அத்தனை முறை – கடித்து மெல்ல வேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.
அடுத்து, உணவு தொண்டையில் இறங்குகிறது. விழுங்கும்போது தொண்டையிலே தளரும் குரல்வளை மூடி, சரியாக வழிவிட்டு, உணவுக் குழாய்க்குள் உணவு செல்லுமாறும் அதற்கு அருகிலேயே உள்ள காற்றுக் குழாய்க்குள் போகாமலும் பார்த்துக் கொள்கிறது. எப்போதாவது இந்த மூடி உடனுக்குடனே மூடிக்கொள்ளாமல் ஒரு சிறு பருக்கையோ, ஒரு துளி திரவமோ காற்றுக் குழாய்க்குள் நுழைந்துவிடும். அப்போது நாம் என்ன பாடுபடுகிறோம். இருமல் வருகிறது. புரை ஏறுகிறது. கண்ணிலே நீர் வந்துவிடுகிறது.
இரைப்பை
விழுங்கப்பட்ட உணவு, உணவுக்குழாய் வழியாக இறங்கி, இரைப்பை என்னும் முக்கியமான உறுப்புக்குள் வந்து சேர்கிறது. இது ஒரு பை போன்றது. ஓயாமல் சுருங்கி, விரிந்து இயங்கிக் கொண்டேயிருக்கும் பை. இந்த அசைவினால் உள்ளே இருக்கும் உணவு நன்கு அரைக்கப்படுகிறது. இரைப்பைக்குள் பல புதிய என்ஸைம்கள் சேர்கின்றன. இரைப்பையின் உட்சுவரில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் என்ஸைம்கள், இவை இவற்றிலே ஒன்று ரென்னின்; நாம் பால் அருந்தியிருந்தால். அதிலுள்ள புரோட்டீனை மெத்தென்ற தயிராக்குவது இதுவே. மற்றொரு என்ஸைம், பெப்சின். இது புரோட்டீன் வகைகளை பெப்டோன் என்னும் எளிதில் கரையும் ஜீரணப் பொருளாக மாற்றுகிறது.
பெரிய அளவில் ஹைடிரோகுளோரிக் அமிலத்தைத் தயாரிக்கிறது. இரைப்பை. இரசாயனச் சோதனைச் சாலைகளில் கண்ணாடிக் குப்பியில் வைத்திருக்கும் அதே அமிலம் தான். இந்த அமிலம் செய்யும் வேலைகள் பல. ஒன்றோடொன்று இணைந்திருக்கும் புரோட்டீன் துகள்களை இது வளரச் செய்து தகர்க்கிறது. இந்த புரோட்டீன்களை பெப்டோனாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள பெப்சின் என்னும் என்ஸைமுக்கு ஒரு வலுவைத் தருகிறது. பலவகை உணவுகளில் கலந்துள்ள கனிமச்சத்தைப் பிரித்தெடுப்பதும் இந்த அமிலம்தான்; உணவுடன் வந்து சேர்ந்துவிடும் பாக்டீரியா நுண் கிருமிகளை அழிப்பதும் இதுவே. வாயிலே உணவு இருப்பது சில நிமிட நேரம் தான்.
ஆனால் இரைப்பையிலே அது பல மணிநேரம் தங்குகிறது. நன்றாகச் சாப்பிட்ட பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் வரை ரென்னின், பெப்சின், ஹைடிரோ குளோரிக் அமிலம் மூன்றும் இரைப்பையில் மிக அதிகம் சுரக்கின்றது. ஜீரணப் பணி வெகு தீவிரமாக நடைபெறுகிறது. இரைப்பையில் நிகழ்வது என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்வதானால், பெரும்பாலும் புரோட்டீன் பண்டங்கள் துகளாகி, இரண்டும் என்ஸைம்கள் மற்றும் ஹைடிரோ குளோரிக் அமிலத்தின் உதவியுடன் பெப்டோன்களாக மாறுகின்றன எனலாம். மருத்துவர்கள் இரைப்பை நிகழ்ச்சியை ‘காஸ்ட்ரிக் ஜீரணம்’ என்கிறார்கள்.
அவ்வப்போது இரைப்பையின் அடிவாய் மூடி சிறிது திறந்து கொள்ளும்; ஓரளவு ஜீரணமான உணவு – கூழாய், பசையாய் விளங்கும் உணவு – அதன் வழியே செல்லும் மூடி உடனுக்குடன் மூடிக்கொள்ளும். நமது உடலுக்குள் நிகழும் அற்புத இயக்கங்களிலே இதுவும் ஒன்று. இரைப்பையிலே உணவு நெடுநேரம் தங்கிச் சிறிது சிறிதாக வெளியேறுவதால் நாம் தினம் மூன்று நாலுமுறை உணவு உண்டால் போதும். இரைப்பை ஒரேடியாகக் காலியாகிவிட்டால், அப்புறம் பசி நம்மை எப்போதும் வாட்டிக் கொண்டே இருக்கும்!

சிறுகுடல்
கூழான, பாதி செரித்த உணவு எடுத்துச் செல்லும் பகுதியே சிறுகுடல். இதன் மேல் பகுதிக்கு டியோடினம் என்று பெயர். இது ஓரடி நீளம் இருக்கும். சிறுகுடலின் பிற பகுதியைவிட அகன்றது இந்தப் பகுதி. இந்த டியோடினத்திற்குள் சொட்டுச் சொட்டாகக் கொட்டுகிறது ஓர் என்ஸைம் சாறு. இது இரண்டு பொருள்களின் கலவை. ஒன்று பித்தச் சாறு, கல்லீரலிலிருந்து வரும் காடியான சாறு. இரைப்பைக்கும் குடலுக்கும் இடையிலுள்ள கணையம் என்னும் உறுப்பிலிருந்து வருவது மற்றொரு சாறு. இந்த உறுப்புகள் எங்கே உள்ளன என்பதை அறிய உதவுகிறது. வரைபடம் மூன்றாவது பொருள் ஒன்றும் ஜீரணத்துக்கு உதவுகிறது. இதுவே குடல்சாறு, குடலில் வழியெங்கும் சுரக்கும் சாறு இது. நமது சிறுகுடல் மெல்லியதாக இருந்தாலும் மிகவும் நீண்டது; நம் உயரத்தைப்போல் ஐந்தாறு மடங்கு இருக்கும்! அதனால் அது பக்குவமாக, கச்சிதமான மடிப்புகளுடன், வயிற்றுக்குள், தொப்புளுக்குப் பின்னே உள்ளது. இந்த நீண்ட சிறுகுடலுக்குள்ளே தான் ஜீரண இயக்கத்தின் பெரும் பகுதி நிகழ்கிறது.
ஜீரண இயக்கம் என்பது சற்றுச் சிக்கலான பணி. கணையம் அனுப்பும் சாற்றில் பல என்ஸைம்களும் உள்ளன. ஹார்மோன் என்னும் ஊக்குவிக்கும் சாறுகளும் உள்ளன. இவை எல்லாமாகச் சேர்ந்து, முன்னரே பெட்டோனாக மாறிய புரோட்டீன் உணவுகளை மேலும் தகர்க் கின்றன. தனித்தனி அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. கணையச்சாறு, கார்போஹைடி ரேட் மற்றும் கொழுப்புச் சத்தை ஜீரணித்து விடுகிறது. கார்போ ஹைடிரேட் மாவுச் சத்தைச் கணையச் சாறு எளிதில் கரையும் குளுக்கோஸ் பொருளாக மாற்றுகிறது. கொழுப்பை இன்னும் எளிய பொருளாக மாற்றுகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்த கல்லீரல் ஒரு பொருளைத் தயாரிக்கிறது.
மனித உடலில் கல்லீரல் தான் இரசாயன சோதனைச்சாலை. லிவர் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு கல்லீரல் என்றும் பொருள்; வாழ்பவர் என்றும் பொருள். இதை வைத்து, வாழ்க்கை எப்படி இருக்கிறது? லிவரைப் பொறுத்து இருக்கிறது என்ற சிலேடையாகச் சொல்வதுண்டு. இரண்டு பொருளிலும் இது உண்மையான வாசகம். கல்லீரலுக்குள் இதயத்திலிருந்து இரத்தம் வருகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவையும், தசைகளில் இவற்றின் சேமிப்பையும் சீராக வைத்துக் கொள்வது கல்லீரலின் பொறுப்பு. இது இரத்தத்திலிருந்து அமினோ அமிலங்களை எடுத்து புரோட்டீன் மாற்றி, சேகரித்து வைத்துக் கொள்கிறது. உடலில் வேறு எங்கேயாவது தேவைப்படும் போது இந்த புரோட்டீனை இரத்தத்தில் வழியாக அங்கே அனுப்புகிறது. உடலிலே விஷப்பொருள் ஏதாவது வந்துவிட்டால் இந்த விஷத்தை முறிப்பது கல்லீரலே. பல வைட்டமின்களையும் கனிச்சத்துகளையும் சேகரித்து வைத்துக் கொள்வதும் அதுவே.
கல்லீரல் தயாரிக்கும் பொருள்களில் ஒன்று பித்தச்சாறு. இது பசுமை கலந்த மஞ்சளான, காடியாபன ஒரு சாறு. அதிலே என்ஸைம் சத்து ஒன்றும் இல்லை. ஆனால் பல பயனுள்ள இரசாயனப் பொருள்கள் இதிலே உள்ளன. இவற்றின் வேலை, உணவை நுட்பமான சின்னஞ்சிறு துகள்களாக்கிக் கலவைச் சாறில் மிதக்கச் செய்து. இந்தச் சாற்றுக்கு எம்ல்ஷன் என்று பெயர். பால் இத்தகைய ஓர் எம்ல்ஸன்தான். உணவு இவ்வாறு எம்ல்ஸன் நிலைக்கு வந்துவிட்டால் என்ஸைம்கள் அதனை ஜீரணிப்பது எளிது. முக்கியமாக, கொழுப்புப் பொருளைப் பித்தநீர் இந்தப் பக்குவத்துக்குக் கொண்டு வந்தால் தான் குடலிலே இது ஜீரணமாகும்.
இவ்வாறு நாம் உண்ட உணவெல்லாம் நீரிலே கரையும் பல வகைத் துகள்களாகத் தகர்க்கப்பட்டுப் பல பொருள்களாக மாறுகின்றன. இதற்கு என்ன நேர்கிறது? இந்தச் சத்துக்கள் உடலிலே ஈர்க்கப்பட வேண்டும். இது நிகழ்வது சிறுகுடலிலேதான். சிறு குடலின் உட்சுவரிலே பல உள்ளன. இவற்றுக்கு ‘வில்லி’ என்று பெயர். ஜீரணமான உணவிலிருக்கும் சத்தை இவை உறிஞ்சிக் கொண்டு நேரே இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. உடனே இரத்தம், தனது சுற்றோட்டத்தில் இந்தச் சத்துக்களை எடுத்து உடலெங்கும் பரப்புகிறது. ஜீரணமாக கொழுப்புச் சத்து நிணநீர் நாளத்தின் வழியாகத் தனியே எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு கழுத்தின் அருகே இரத்தத்தில் அந்தச் சத்து கரையச் செய்கிறது. இவ்வாறு நாம் உண்ணும் உணவு இரத்தத்தை அடைகிறது. இரத்தத்தின் மூலம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. உடலுக்குச் சக்தி தரவும், உடல் வளர்ச்சிக்கும், உடலின் இயக்கங்களை நிறைவேற்றவும் உதவுகிறது.
வைட்டமின்களும் கனிச்சத்தும் சாதாரணமாக நீரில் கரையக் கூடியன. இல்லாவிட்டாலும் இரத்தத்தில் கரையும் வகையில் அவற்றுக்குத் தேவையான மாற்றம் தரமுடியும். வைட்டமின் ஏ மட்டும் விதிவிலக்கு. அது கொழுப்பில் கரைவது. சிறுகுடலில் கொழுப்பு போலவே இது உறிஞ்சப்படுகிறது. வைட்டமின்களும் கனிச்சத்தும் செரிமானத்தின் போது நுண்துகள்களாக உடைபடுவதில்லை இதர சத்துப் பொருள்கள் ஜீரணமானதும் இவை அப்படியே உடலிலே கரைந்து கலந்து விடுகின்றன.
பெருங்குடல் :
சிறுகுடலைத் தொடர்ந்துள்ள பெருங்குடல் வழவழப்பானது. சிறுகுடலில் உள்ளதுபோல அதற்குள்ளே உறிஞ்சுகுழாய் ஒன்றும் இல்லை. தடிமனான சைக்கிள் ட்யூபைப் போன்றது அது. படத்தைப் பார்த்தால் ‘ப’ எழுத்தைக் கவிழ்த்தது போன்று இது விளங்கக் காணலாம். ஜீரணமான உணவு இதன் வழியே செல்லச் செல்ல அதன் உட்சுவர் வழியே உணவிலுள்ள நீரேல்லாம் இரத்தத்திலே உறிஞ்சப்படுகிறது. இதனால் உணவு திரவநிலை குறைந்து திடப் பொருளாக மாறுகிறது. ஜீரணமான உணவிலே வேறு சில மாற்றங்களும் நேர்வதால் சற்று துர்நாற்றம் வருவதற்கும் காரணமாகிறது. ஜீரணமாகாத பொருளெல்லாம் சேர்ந்து ஆசன வாய் என்னும் வெளியேற்ற வழியாக மலமாக வெளியேறுகிறது
இனி வீடியோ காட்சி இதோ:இனி வீடியோ காட்சி இதோ:

சனி, 19 ஜனவரி, 2013

CM CELL -முதலமைச்சரின் தனிப்பிரிவு

முதன்மை கல்வி அலுவலர்கள்


S.NODISTRICTSCEO'SPHONE NUMBERE.MAIL ID
1ARIYALURஆர்.வைத்தியலிங்கம்04326-220909ceo.tnari@nic.in
2ARIYALUR(SSA)
3CHENNAIஎஸ்.தமிழ்மணி044-24321735ceochn@nic.in
4CHENNAI(SSA)
5COIMBATOREடி.ராஜேந்திரன்0422-2391849ceocbe@nic.in
6COIMBATORE(SSA)வி.பிரபாகரன்
7CUDDALOREசி.ஜோசப் அந்தோணி ராஜ்04142-286038ceocud@nic.in
8CUDDALORE(SSA)எஸ்.வான்மதி
9DHARMAPURIசெ.அமுதவள்ளி04342-260085ceodpi@nic.in
10DHARMAPURI(SSA)04342-261872
11DINDIGULஜி.மூர்த்தி0451-2426947ceodgl@nic.in
12DINDIGUL(SSA)
13ERODEகே.ஸ்ரீ தேவி0424-2256499ceoerd@nic.in
14ERODE(SSA)எஸ்.கே.விஸ்வநாதன்
15KANCHEEPURAMவி.குமார்044-27222128ceokpm@nic.in
16KANCHEEPURAM(SSA)
17KANYAKUMARIஏ.எஸ்.ராதாகிருஷ்ணன்04652-227275ceokkm@nic.in
18KANYAKUMARI(SSA)
19KARURசி.ஜெயலட்சுமி04324-241805ceo.tnkar@nic.in
20KARUR(SSA)
21KRISHNAGIRIஎஸ்.சுகன்யா04343-239249ceokgi@nic.in
22KRISHNAGIRI(SSA)எம்.பாஸ்கரன்
23MADURAIஎஸ்.நாகராஜா முருகன்0452-2530651ceomdu@nic.in
24MADURAI(SSA)என்.போஸ்
25NAGAPATTINAMஎஸ்.சந்தான தஞ்சைவாணன்04365-243354ceongp@nic.in
26NAGAPATTINAM(SSA)எம்.கே.சுப்பிரமணியன்
27NAMAKKALபி.பொன்னையா04286-232094ceonmk@nic.in
28NAMAKKAL(SSA)
29PERAMBALURகே.ஜி.மல்லிகா04328-224020ceopmb@nic.in
30PERAMBALUR(SSA)ஜி.சீதாராமன்
31PUDUKOTTAIப்பி.சுகுமார் தேவதாஸ்04322-222180ceopdk@nic.in
32PUDUKOTTAI(SSA)எம்.எஸ்.பரிமளா
33RAMNADஎல்.டி.ரங்கநாதன்04567-220666ceormd@nic.in
34RAMNAD(SSA)கே.ராஜராஜன்
35SALEMஆர்.ஈஸ்வரன்0427-2450254ceoslm@nic.in
36SALEM(SSA)
37SIVAGANGAIவி.ராதாகிருஷ்ணன்04575-240408ceosvg@nic.in
38SIVAGANGAI(SSA)
39TANJOREஎஸ்.மதி04362-237096ceotnj@nic.in
40TANJORE(SSA)ஆர்.சுப்பிரமணியம்
41NILGRISஎம்.வாசு0423-2443845ceonlg@nic.in
42NILGRIS(SSA)
43THENIஎம்.ரவிச்சந்திரன்04546-250315/255392ceothn@nic.in
44THENI(SSA)
45THIRUVANNAMALAIஏ.நூர்ஜஹான்04175-224379/227227ceotvm@nic.in
46THIRUVANNAMALAI       (SSA)கிரேஸ் பிராங்க்ளின்
47THIRUPPURஎன்.ஆனந்தி0421-2240301ceo.tntpr@nic.in
48THIRUPPUR(SSA)
49TIRUVARURஎம்.சுப்பிரமணியன்04366-225903ceotvr@nic.in
50TIRUVARUR(SSA)04366-244359 
51TIRUVALLUR044-27662599 ceotlr@nic.in
52TIRUVALLUR(SSA)ப்பி.செல்வகுமாரி
53TRICHYகே.செல்வகுமார்0431-2708900ceotry@nic.in
54TRICHY(SSA)
55TIRUNELVELIபி.கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி0462-2500702/2500949ceotnv@nic.in
56TIRUNELVELI(SSA)
57TUTICORINஎஸ்.ருக்மணி0461-2326281ceo.tntut@nic.in
58TUTICORIN(SSA)ஜே.ஆர்.ஐசக் சுகிர்த ராஜ்
59VELLOREபொன்.குமார்0416-2252690/2258650ceovel@nic.in
60VELLORE(SSA)
61VILLUPURAMப்பி.புண்ணிய கோட்டி04146-220402ceovpm@nic.in
62VILLUPURAM(SSA)எஸ்.பூபதி
63VIRUDHUNAGARப்பி.பகவதி நாடார்04562-252702ceovnr@nic.in
64VIRUDHUNAGAR

இணை இயக்குநர்கள் - தொடர்பு எண்கள்


இணை இயக்குநர்கள் - தொடர்பு எண்கள்

S.NO
DEPARTMENTS
J.DIRECTORS
PHONE NUMBER

1
JOINT DIRECTOR (HIGHER SECONDARY)
எஸ்.உமா
044-28280186, 
2
JD (PERSONAL)
வி.ராஜராஜேஸ்வரி
044-28276340,9443115343
3
JD(RMSA)
பூ.ஆ.நரேஷ்
9443933373
4
JD(SECONDARY)
எஸ்.கண்ணப்பன்
044-28273591, 9443405775
5
JD(MATRIC)
எஸ்.கார்மேகம்
044-28270169, 9442144401
6
JD(PUBLIC LIB)
தர்ம.ராஜேந்திரன்
9444102069
7
JD(VOCATIONAL)
044-28279201, 
8
JD(NSS)
சி.உஷாராணி
044-28279201,9443490552
9
JD(SSA)
கே.சசிகலா
044-28253684,
10
JD(SSA)
எஸ்.நாமகிரி
044-28311716,
11
JD(SSA)
பெ.குப்புசாமி
044-28261242, 
12
JD(NON FORMAL)
வி.பாலமுருகன்
044-28277039
13
JD(EXAM) HS
ஜி.ஆரோக்கியசாமி
044-28264513, 9442060092
14
JD(P)(EXAM)
கே.தங்கமாரி
044-28276672,
15
JD(TRB)
டி.உமா
044-28272455, 9444137396
16
JD(SCERT)
044-28211392, 
17
JD(SCERT)
எம்.பழனிச்சாமி
9443811129
18
JD(ELE)ADM
பி.ராமராஜ்
044-28216638, 
19
JD(ELE)AIDED SCHOOLS
என்.லதா
9444213546
20
JD(TRB)
எஸ்.சேதுராம வர்மா
9894944409
21
JD(KALLER)
ஆர்.பாண்டுரங்கன்