புதன், 26 டிசம்பர், 2012

நம் பிள்ளைகளை நாம் ஒழுங்காக வளர்க்கிறோமா?


நம் பிள்ளைகளை நாம் ஒழுங்காக வளர்க்கிறோமா?
             அன்பர்களுக்கு வணக்கம், கடந்த பதிவில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பிய பிரிவில் படிக்க விடுங்கள் எனக் கூறியிருந்தேன். அதனை படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி படித்து விடுங்கள்.


படித்து விட்டால்தான் ஒரு தொடர்ச்சி இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம். பிள்ளைகளுக்கு பிடித்த பிரிவில் சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அவர்களுக்கு தானாக படிக்க ஆர்வம் வருமா? அதுவும் இப்போதிருக்கும் சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு எப்படி தவறு செய்யலாம்? என்பதை சொல்லித்தரும் காரணிகள் தான் அதிகம், உதாரணம் ஊடகத்துறை.


 எனக்கு ரொம்ப நாளாக பெற்றவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வி உள்ளது, யாராவது பிள்ளையிடம் எதற்காக படிக்கிறோம் என்று விளக்கியதுண்டா? பேச்சுவாக்கில் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதை தவிர, படிப்பு எதற்காக என்று பிள்ளைகளுக்கு விளக்கியதுண்டா? சரி ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் இருந்திருந்தால் எடுத்து சொல்லாமல் இருந்திருப்பீர்கள், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


பெரும்பாலான பெற்றோர்கள் படிப்பதை கவுரவத்தின் அடையாளமாகவும், வேலைக்கு செல்வதற்கான தகுதியாகவும்தான் பார்க்கிறார்கள், அதனால் தான் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை பார்ப்பவர்கள் அவனது பொது அறிவு மற்றும் பண்பாடு, ஒழுக்கங்களை பெரிதாக கவனிப்பதில்லை.


முதலில் கல்வி எதற்கு என்றால் பிள்ளைகளுக்கான தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவும், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளவும்தான், இப்போதுள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன, அதற்கு ஒரு வகையில் பெற்றவர்களாகிய நாமும் ஒரு காரணம்.


நம் பிள்ளை முதல் மதிப்பெண் மட்டும் வாங்கினால் போதுமா? தான் வாழும் ஊரின் பின் கோடு தெரியாமல் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு வங்கிக்கு சென்று காசோலை மாற்ற படித்த பிள்ளைகள் தயங்குகிறார்கள்? ஒரு அரசு அலுவலகத்துக்கு போய் ஏதேனும் ஒரு வேலையாக விண்ணப்பம் எழுத அது போல் மாதிரி ஏதேனும் இருந்தால் குடுங்கள் என்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வழியில் யாருக்கேனும் அடிபட்டால் கண்டும் காணாமல் வரவும், பிரச்சனை என்றால் அதில் சிக்காமல் ஒளிந்து கொள்ளவும் தான் கற்றுக் கொள்கிறார்கள். கற்றவன் மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க வேண்டாமா? ஓட்டு போட சலிப்பாக வீட்டிலேயே அமர்ந்து கொண்டு மற்றவர்களை குற்றம் சொல்லத்தான் அவர்களை படிக்க வைத்தோமா?


படிக்கின்ற பிள்ளைகளுக்கு முதலில் தன்னம்பிக்கை, ஒழுக்கம், பண்பாடு, நாட்டுப்பற்று அவசியம் பயிற்றுவிக்க பட வேண்டும், இவைகள் இப்போது எந்த நிறுவனங்களும் சொல்லியும் தருவதில்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும்தான் கற்று தருகிறார்கள். வேலைக்கு எப்படி செல்வது என்பதை பணம் வாங்கிக் கொண்டு கற்று தருகிறார்கள். 

இதற்கு தீர்வு நம் கையில் தான் இருக்கிறது, நம் பிள்ளைகள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் என்ன செய்கிறான் என்பதை விழிப்போடு கவனியுங்கள், நம் பிள்ளை முதல் மதிப்பெண் மட்டும் பெற்றால் போதாது, நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் நெஞ்சில் பதியுங்கள்.


தினசரி செய்திகளை பிள்ளையுடன் விவாதியுங்கள், அவனுக்காக நீங்கள் சினமாவையும் பார்க்கலாம், அப்போதுதான் அவன் உங்களுக்காக செய்திகளை பார்ப்பான். சின்ன சின்ன பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள், சின்ன பசங்க, படிக்கற பசங்களுக்கு என்ன தெரியும்னு நினைக்காம எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக் குடுக்க ஆரம்பிங்க.


பிள்ளைங்க மேல முழுசா நம்பிக்கை வைக்கறது தப்பு இல்லை, அதுக்குனு அவனை கைக்கழுவி விடறதுதான் தவறு, அவன் படிப்பை பற்றி பேசுங்கள், உங்கள் வேலை மற்றும் தொழிலை பற்றி அவனிடம் விவாதியுங்கள். முதலில் உங்கள் குடும்ப கஸ்டங்களை அவனுக்கு தெரிய படுத்துங்கள், அப்போதுதான் அவனுக்கு அவன் பொறுப்பு புரியும்.

உங்கள் வீட்டு பிரச்சனை மட்டுமல்ல, நாட்டு பிரச்சனையையும் தீர்க்க போவது அவன் தான், அவனது தலைமுறைதான் என அவர்களுக்கான கடமையை முதலில் அவர்களுக்கு உணர்த்துங்கள், அவர்கள் புரிந்து கொண்டதும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள், எப்படி செய்ய வேண்டும் என்பதை அவனே சிந்தித்து கொள்வான். 

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளையிடம் நண்பனாக பழகி நல்லவைகளை குருவாக கற்று தர வேண்டியதுதான்.

மேல கூறிய அனைத்தும் என் கருத்துக்களே, ஏதேனும் பிழை இருப்பின் தெரிவியுங்கள். நம் பிள்ளைகளின் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள்


உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள்


அன்பர்களுக்கு வணக்கம், இன்று முதல் மக்கள் சந்தையின் மூலமாக தினமும் உங்களை சந்திக்க போவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திடும் இந்த முயற்சியில் ராமாயண அணிலாய் என் பங்கும் இருக்கும் என நம்புகிறேன். இறைவனை மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டு துவங்குகிறேன்.

நம் தேசத்து இளைஞர்களுக்கு(என்னையும் சேர்த்துதான்) ஒரு பெரிய கெட்ட பழக்கம் இருக்கிறது. அது கிட்டத்தட்ட அடிமைத்தனம் போன்றதொரு பழக்கம், அதுதான் தனித்தன்மையற்று இருப்பது. எதை பற்றி சொல்கிறேன் என்று புரியவில்லையா? கொஞ்சம் கொஞ்சமாய் புரியும், தொடருங்கள்.


நம் நாட்டில் ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து படிப்பை முடித்து வேலைக்கு போகும் வரை ஏன் கடைசி வரையுமே எப்படி வளர்ந்து வாழ்கிறது தெரியுமா? அடுத்தவர்களின் ஆசைப்படி தான், நான் அடுத்தவர்கள் என்று அழைப்பது பெற்றவர்களை அல்ல, மற்றவர்களை. 

உதாரணத்திற்கு ஒரு இடைத்தர வர்க்கத்தில் ஒரு பையனை முதலில் பள்ளியில் சேர்த்துவதாக இருந்தால் என்ன யோசிப்பார்கள்? பக்கத்து வீட்டு குழந்தை எங்கு படிக்கிறது என்றுதான், அதில் தவறில்லை, ஆரம்பத்தில் ஒரு துணைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இருக்கலாம்.

போகப்போக அந்த பையனின் மதிப்பெண்கள் பக்கத்து வீட்டு பையனுடன் ஒப்பிட்டுதான் நல்ல மதிப்பெண்ணா என்ற முடிவுக்கே வரும். அதுவும் தவறில்லை, சிறு வயது, ஒரே படிப்பு என விட்டு விடலாம்.

  

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் வரும் பாருங்கள் ஒரு பிரச்சனை, எத்தனை வீட்டில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு கல்லூரியில் சேர்க்கிறார்கள்? குடும்ப ஏழ்மையின் காரணமாக முடியாமல் போகிறவர்களை நான் கேட்கவில்லை. படிக்கக் கூடிய பிள்ளையை கேட்காமல் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்க்கிறவர்களைத்தான் கேட்கிறேன்.

அப்படி எல்லாம் இந்த காலத்துல யாராவது இருப்பாங்களா? என்று நீங்கள் கேட்கலாம், நீங்கள் சந்தித்திருக்க மாட்டிர்கள், உங்கள் ஊர் கொஞ்சம் முன்னேறியதாக இருக்கும், நான் இருக்கும் பேரூராட்சியில் வாரம் ஒருத்தரையாவது இது போல் பார்க்கிறேன். அவர்கள் ஏமாற்ற படுகிறார்கள். 
அவர்கள் சொல்லும் புளித்து போன வசனம் "சின்ன பையனுக்கு என்ன தெரியும்?"


நான் ஒரு தொழில் நுட்ப கல்லூரியில் பணியாற்றுகிறேன், அருகில் இருக்கிற காரணத்திற்காக எங்கள் கல்லூரியில் சேர்க்க வரும் பெற்றோர்கள்  பிள்ளைகளை கேட்காமல் மற்றவர்கள் பேச்சை கேட்டு "எவ்வளவு செலவானாலும் பராவாயில்லங்க, என் பையனை மெக்கானிக்கல் குருப்ல சேர்த்து விடுங்க" என்பார்கள்.

அவர்கள் படிக்காதவர்கள், தெரியாமல் கேட்கிறார்கள், பிள்ளைகளும் என்னவென்று தெரியாமல் சேர்ந்து கொண்டு சிலர் படிக்க முடியாமல் திணறுகிறார்கள், காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

சிலருக்கு கணிதம் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும், சிலருக்கு படம் வரைய பிடிக்கும், டிப்ளமோ என்றால் மெக்கானிக் என்று விசாரிக்காமல் சேரும் மாணவர்களில் பலர் அதில் இருக்கும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறார்கள். உங்களுக்கே தெரியும், தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் கடைசியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று?

இதற்கு தீர்வு கல்லூரிகளின் கையிலும் பெற்றாவர்களின் கையிலும் தான் இருக்கிறது. முதலிம் பெற்றவர்கள் தாங்கள் படிக்காதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு படிக்க போகும் பிள்ளையை அழைத்து கொண்டு நேரே கல்லூரிக்கு சென்று என்னென்னெ பிரிவுகள் இருக்கிறது என்று விசாரித்து விட்டு அதில் வரும் பாடங்கள் எவ்வாறு இருக்கும் என பிள்ளையை விட்டு கேட்க சொல்லுங்கள், எந்த பிரிவில் சேர விரும்புகிறான் என்று முடிவை அவன் கையில் விடுங்கள்.வேலை வாய்ப்பு எல்லா பிரிவுக்கும் சமம்தான், மெக்கானிக் என்பதற்காக தேர்ச்சி பெறாத மாணவனுக்கு எந்த நிறுவனமும் வேலை தரப் போவதில்லை.பெரும்பாலான கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கு தயாராகிவிட்டன.


பெற்றோர்களே நீங்கள் தயாரா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டுங்கள், ஊட்ட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும்.

எவ்வாறு ஆர்வமுடன் படிப்பது என்பதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

" மாதவிடாய் " ஆவணப்படம்


மாதவிடாய் இந்த வார்த்தையை உபயோகிப்பதையே கேவலமாக நினைத்த சமூகம் நம் சமூகம். இதற்கு அந்த 3 நாட்கள், வீட்டுக்கு தூரம் என்று பல கேவலமான பெயர்கள் இட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு செல்வந்தாரக பிறந்தாலும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள் இதை மறுக்க இயலாது.

கால ஓட்டத்தில் இன்று இந்த கொடுமைகள் மறந்து இன்று நாப்கின் அறிமுகப்படுத்ப்பட்டு ஒரளவிற்குத்தான் மக்கள் இதை பின்பற்றுகின்றனர். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் அந்த 3 நாட்களுக்கு மட்டும் என நாப்கின் விளம்பரம் வரும் போது என்ன ஏதுவென்று தெரியாமல் விழிபிதுங்கியவர்கள் தான் ஏராளம்.

பெண்களை விட ஆண்களுக்கத்தான் இதில் விழிப்புணர்வு தேவை என்று மாதவிடாய் என்று பெயரிட்டு ஆண்களுக்காக ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார்கள் முகநூலில் நான் அண்ணன் என்று அன்போடு அழைக்கும் இளங்கோவனும் அவரின் மனைவி கீதாவும்.

இந்த படத்தின் இயக்குநர் கீதா அவர்கள் மாதவிடாய் என்று படத்திற்கு  பெயரிட்டதற்கே அவரை பாரட்ட வேண்டும்...

இந்த ஆவணப்படம் ஆண்களின் விழிப்புணர்வுக்குத்தான்.. இந்த ஆவணப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

இந்த படத்தை பற்றி பிரபலங்களின் கருத்துக்கள் முகநூலில் இளங்கோவன் மற்றும் நண்பர்கள் பதிந்தது...


தாய்வழிச்சமூகத்தின் விழுதுகள் பாய்ந்திருக்கும் சில இனக்குழுக்களுக்கிடையே இன்றும் மாதவிடாய் மதிப்புமிக்கதாகவும், வளமைக்கு அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா என்னும் காளி மாதா கோவிலில் அம்மனின் மாதவிடாய் ரத்தமே பிரசாதமாக கொடுக்கப்படுவதாக ஐதீகம் இருக்கிறது.

தாந்திரிக முறை வழிபாட்டிலும் கூட யோனியும், மாதவிடாயும் வழிபாட்டுக்குரிய சங்கதிகளாகவே கருதப்படுகின்றன.
கடவுளோ, மத நூலோ மாதவிடாயை வெறுக்கும் படியோ, அதன் காரணமாய் பெண்களை ஒதுக்கிவைக்கும் படியோ சொன்னதில்லை.

பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமுதாயமே மாதவிடாய் பற்றிப் பொய்யும், இழிவுமான கற்பிதங்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.
துணியோ, நாப்கினோ...ஒழித்து வைத்துப்பயன்படுத்தும் நிர்பந்தம் எதற்கு பெண்ணுக்கு?

ஆண் ரேசர் வாங்கிச்சவரம் செய்யக் கூச்சப்படுகிறானா என்ன?
மாதவிடாய் பெண்களை தனிமைப் படுத்திக் கொடுமை செய்யும் "முட்டு வீடுகள்" இன்றைக்கும் நம் கிராமங்களில் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?
மாதவிடாய் சமயத்திலும் மோனோபாஸ் சமயத்திலும் பெண்களுக்கு உளவியல்ரீதியான சிரமங்கள் நேரும் . அதன் விளைவாக காரணமே இல்லாமல் கூட எரிச்சல்படுவதும் சில பெண்களின் இயல்பாய் இருக்கும் என்ற மருத்துவ உண்மை எத்தனை ஆண்களுக்குத் தெரியும்?
"அரசு அலுவலகங்களிலுள்ள கழிப்பறைகளில் பெண்களின் மாதவிடாய் தேவைக்கான வசதிகள் என்ன ஏற்படுத்தித்தரப்படுகின்றன?" -என்ற கேள்வியை , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மத்திய அரசின் கட்டிடங்கள் கட்டும் அரசு நிறுவனமான சிபிடபிள்யூடி யிடம் கேட்ட போது, அப்படி எந்த வசதியும் செய்யப்படுவதில்லை என்றே பதிலாகக் கிடைத்துள்ளது.
 வீட்டிலிருக்கும்-அலுவலகத்திலிரருக்கும் பெண்களைக் காட்டிலும் பொதுவெளியில் களப்பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் பெரும் சவாலாக இருக்கிறது.

கழிப்பறை வசதிகள் இல்லாத சூழலில் எல்லாம் பணியில் கவனம் குறைந்திட அவளுடைய பணித்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுவிடுகிறது.
 மாதவிடாய் ரத்தம் அசிங்கமானதோ, அருவெறுப்பானதோ அல்ல.

தாய்ப் பாலைப் போன்று பெண்ணின் உடம்பில் ஊறும் ரத்தத்தில் உருவாகும் இன்னொரு இயற்கையான சங்கதி.

சமீபத்திய ஸ்டெம் செல் ஆய்வுகள் இந்த ரத்தத்தின் மூலம் குணப்படுத்த முடியா மனித நோய்கள் பலவற்றைக் குணப்படுத்த முடிவதாய் கண்டுபிடித்துள்ளன.

எனவே மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் உருவாகியுள்ளன.
"ஒரு பொது இடத்திலோ....மேடையிலோ....யாராவது என்னைக் கவனித்து " அம்மா....உங்க ஆடையில கறை...." என்று சொல்லத் தொடங்கினால் ஏதோ கொலைப்பாவம் செய்த மாதிரி ஒரு குற்றவுணர்வு......

எங்கிருந்து வருகிறது இந்தக் குற்றவுணர்வு....?

பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கே இப்படியொரு குற்றவுணர்வு என்றால் சராசரிப் பெண்களின் நிலை என்ன?"

உங்களின் அன்பு மகளுக்காக நகையும் விலை உயர்ந்த ஆடைகளும் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால் அந்தக்குழந்தை சரியான கழிப்பறை வசதியில்லாத பள்ளியில் நாப்கின் மாற்ற முடியாமல் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் சொல்லொண்ணா கொடுமையை அநுபவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?‘
சட்டங்களை இயற்றும் சட்ட மன்றத்திலும் சரி. அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசு அலுவலகங்களிலும் சரி. மாதவிடாய் காலத்துப் பெண்களின் தேவையை மனதில் கொண்டு கழிப்பறையில் எந்த வித வசதியும் செய்யப்படவில்லை. அப்படியொரு சிந்தனையும் இல்லை என்கிறார்.
- மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி.
 பயன்படுத்திய நாப்கினை டாய்லெட்டுக்குள் போடுவதால் டாய்லெட் அடைத்துக்கொள்கிறதுதான்....

ஆனால் பெண்கள் நாப்கினை அப்புறப்படுத்த வேறு வழி என்ன கொடுத்திருக்கிறோம்?
 இந்தியாவில் சுமார் 80% பெண்கள் மாதவிடாய் சமயத்தில் துணியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாய் அடித்தட்டுப் பெண்கள்.

அதில் தவறொன்றும் இல்லைதான்.

என்றாலும் துணியை ஆண்களுக்குத் தெரியாத வண்ணம் சுத்தப்படுத்தி உலர்த்திப் பயன்படுத்தவேண்டுமே என்ற சமூக நிர்பந்தம் காரணமாய் சரிவர சுத்தப்படுத்தாமலும், சரிவர உலர்த்தாமலும் பயன்படுத்துவதால் அதுவே பெரும்பாலான நோய்கள் வருவதற்கு காரணமாகிவிடுகின்றது.
"துப்புரவுப்பணி என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணி"- என்ற சமுதாயத்தின் ஆதிக்க எண்ணமும் கூட கழிப்பறையில் எந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் நவீன முறையைக் கொண்டுவருவதற்கு ஒரு வகையில் தடையாக நிற்கிறது.

அதனாலேயே பெண்களின் அத்தியாவசியத் தேவையான கழிப்பறை சீர்திருத்தமும் தடைப் பட்டு நிற்கிறது.
  "ஜாதிக் கலவரத்தை கட்டுப்படுத்தி பந்தோபஸ்த்து டியூட்டில இருக்கிற பெண் காவலர் படுற சிரமம் மத்த வேலைகளுக்குப் போகும் பெண்களின் சிரமத்தை விட கொடுமையானது.

ரெண்டு ஜாதியில் எந்த ஜாதி வீட்டு டாய்லெட்டை பயன்படுத்தினாலும் அந்த ஜாதிக்குத்தான் காவல்துறை சப்போர்ட் பண்ணுறாங்கன்னு அடுத்த ஜாதிக்காரங்க கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க"
- திலகவதி ஐபிஎஸ் (ஓய்வு)
 
 "கழிப்பறை/ தண்ணீர் வசதி இல்லாததால் நாப்கின் மாத்த முடியாது. நாப்கின் மாத்த முடியாததால் சிறு நீர் கழிக்க முடியாது. சிறு நீர் கழிக்க முடியாததால் பகல் முழுக்க தண்ணீர் குடிக்க மாட்டோம்....தண்ணீர் குடிக்க முடியாது என்பதால் நாள் முழுக்க சாப்பிடவும் மாட்டோம்."

உங்கள் குழந்தைகள் மதியம் சாப்பிடாமல் டிபன்பாக்ஸை அப்படியே வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் போது, அதற்குள் இப்படியும் ஒரு காரணம் இருக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரு ஓரங்களில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வறுமை காரணமாய் நாப்கினோ- துணியோ பயன்படுத்தும் வசதி இருக்காது.

சுத்தப்படுத்திக் கொள்ளவும் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதன் காரணமாய் தொற்றும், சமயங்களில் கர்ப்பைப்பை புற்று நோய் நேரவும் இந்த சுத்தமின்மை காரணமாகிவிடுகிறது.
மகப்பேறு, குழந்தை வளர்ப்பு என்ற வரிசையில் மாதவிடாய் என்பதையும் "பொம்பளைங்க சமாச்சாரம்" என்று விலகியும், விலக்கியும் வைப்பது ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கிறது. 

ஆனால் இது ஆண்மைக்கான அழகல்ல.

மேற் சொன்ன அனைத்து காரியத்திலும் ஆணுக்கும் பொறுப்பு உண்டு.

இதனால்த்தான் "மாதவிடாய்"- ஆவணப்படமும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான படமாய் அமைந்தது.

எப்படியோ, இதற்கான அழைப்பிதழில் அந்த முக்கிய சங்கதி விட்டுப் போனதை இப்போதுதான் கவனித்தோம்.

எனவே " ஆண்களுக்கான பெண்களின் படம்", " A film by Women for Men" என்ற திருத்தத்தை உள்ளடக்கி அழைப்பிதழை மீண்டும் முன்வைக்கிறார் இளங்கோவன்..
இந்த ஆவணப்படம் வெற்றியடைந்து பல விருதுகளை பெறும் அதை விட இதைப் பார்த்து விழிப்புணர்வால் இந்த இயற்கை குருதியில் இருந்து சுகாதரமாக தன் மனைவியை கணவன்மார்கள் பாதுகாத்துக்கொண்டால்
அது தான் மிகப்பெரிய விருது...

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?


   
சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.

காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...

எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..

நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..

என் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
.
.
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம். 

சில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார்.  தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?

அவர் செய்யாததென்ன?

தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.

                             



ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:

நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.  சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..

சேவைகள், இணையதளங்கள்:

திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும்.  சிலவமயம் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.

                                       


முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும்.  பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து காணொளியின் பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா? என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.

       
                                             

இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?

கம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்

கம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்

கம்ப்யூகம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்ட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்

   

கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் 

மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதிகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்ற மில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருதுகிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் சில மாற்றவேண்டிய பழக்கங்களை இங்கு காணலாம்.

1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்: 

பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய  தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல்களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த
பழக்கம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை அனுப்பித்
தகவல்களைத் திருடுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. நமக்கு வேதனை தரும் விஷயமாக மாறுகிறது. சீனாவில், ஒருவரின் வீடு, அவர் பேஸ்புக் தளத்தில் இந்த வகையில் நட்பு  ஏற்படுத்திக் கொண்ட ஒருவராலேயே கொள்ளையடிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அவர் தன்னைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் பலவற்றைத்தந்ததுதான்.

2. நிறுவன தளங்களில் கட்டுப்பாடு: 

நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவன இணைய தளம் மிகவும் பாதுகாப்பானது என்பதால், தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும், தங்களின் பாஸ்வேர்ட், நிதிநிலை போன்ற தகவல் களையும், பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் சம்பந்தப் பட்டவர்களின் தனிச் சொத்து. எனவே நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பினை நம்பி தகவல்களைத் தருவது, ஆபத்தை வரவழைக்கும் செயலாகும். ஏனென்றால், எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அனைத்து இணையதளங்களும் பாதுகாப்பு அற்றவையே. மேலும் நிறுவன தளங்களின் பாதுகாப்பு குறித்து, நாம் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

3. ஆபத்தான வெப் லிங்க்: 

இணைய தளங்களில்,மின்னஞ்சல்களில் தரப்படும் இணைய தளங்களுக்கான 
லிங்க் எனப்படும், சிறிய அளவிலான இணைய முகவரிகள் என்றுமே ஆபத்தானவை. குறிப்பாக, இணைய சமுதாய தளங்களுக்கானவை என்று தரப்படும் சிறிய லிங்க்குகளில் பெரும்பாலானவை ஆபத் தானவை என்று 
கண்டறியப் பட்டுள்ளது. இவற்றில் கிளிக் செய்தால், நாம் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்குப் பதிலாக, ஆபத்தைத் தரும் பிற தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். எனவே, இணைய தளங்களில், அல்லது இந்த தளங்கள் அனுப்பியதாகப் பெறப்படும் லிங்க்குகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முழுமையான முகவரிகளை டைப் செய்வது சிரமமாக இருந்தாலும், அவ்வாறு டைப் செய்தே அந்த தளங்களுக்குச்செல்ல வேண்டும்.

4. அபாயங்கள் குறித்து கற்றுக் கொள்ளுதல்:

இணையத்தில் நம்மைச் சிக்கவைக்கும் அபாய வழிகள் குறித்து பலர் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பான சூழ்நிலையில் வாழப் பழகிக் கொண்டவர்கள்,தாங்கள் பயன்படுத்தும் இணைய தளங்களும் பாதுகாப்பானவையே என்ற எண்ணத் தில் உள்ளனர். இது  தவறான முடிவாகும். இணைய எச்சரிக்கை குறித்து தரப்படும் செய்திகளை அலட்சியம் செய்கின்றனர். இது  தவறு. இணையம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஓர் இடம். இங்கு பாதுகாப்பு என்பது ஒரு சமுதாய விஷயமாகிறது. எனவே இது குறித்து நன்கு அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும்  பின்பற்ற வேண்டுவது நம் கடமையாகிறது.

5. அப்டேட்டிங் சாப்ட்வேர்: 

இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவபவர்கள், பாதுகாப்பிற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய் வதில் சிறிது கூட  தாமதப்படுத்துவதில்லை. ஆனால் அதன் பின்னர் அவற்றை அப்டேட் செய்வதில் மிகவும் பின்தங்கிவிடுகின்றனர். பலர் அது குறித்து எண்ணுவதே இல்லை. இந்தப் போக்கும் பழக்கமும் மிகவும் மோசமான விளைவுகளைத் தோற்று விக்கும்.

6. மால்வேர் எப்போதும் வரும்: 

பலர், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற மால்வேர் புரோகிராம்கள், குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இணையத்தில் வெளியிடப்படும் என்று எண்ணுகின்றனர். இது தவறு. விடுமுறை நாட்களிலும், சில விழா கொண்டாட்டத்தின் போதும், இந்த மால்வேர் புரோகிராம்கள் அதிகமாகத் தென்பட்டாலும், இவை 24 மணி நேரமும் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. தொடர்ந்து பெருகி நாசம் விளைவிக்கும் தன்மை கொண்டதாகவே இயக்கத்தினைக்கொண்டுள்ளன. எனவே நாமும் முழு நேரமும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டியுள்ளது.

7. திருட்டு சாப்ட்வேர் தரவிறக்கம்: 

ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் கம்ப்யூட்டர்  பயன் படுத்துபவர்கள், இலவச மற்றும் விலை மலிவான சாப்ட்வேர் புரோகிராம்களை டவுண்லோட் செய்வதில்  மிக ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரும் பிரபலமில்லாத இணைய தளங்கள், இந்த சாப்ட்வேர் தொகுப்புகளுடன், தங்களுடைய மால்வேர் புரோகிராம்களையும் இணைத்தே  அனுப்புகின்றன. சாப்ட்வேர் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்கள் கழித்து, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் வேலையைக் காட்டுகின்றன.

8. ஒரே பாஸ்வேர்ட்: 

பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்பதால், பலர் ஒரே பாஸ்வேர்டினை அனைத்து தளங்களுக்கும் வைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இதனால், ஒரு இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட் கைப்பற்றப் பட்டாலும், மற்றவற்றையும் கெடுப்பது மால்வேர் அனுப்பியவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே சிரமம் எடுத்தாவது, ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தனித்தனி பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.

9:அவசரப்படுவது: 

தங்களுக்குத் தகவல்கள் அவசரமாகத் தேவைப்பட்டு, இணையத்தில் தேடும்போது,  பலர், சில இணைய தளம் குறித்து சந்தேகம் அடைந்தாலும், நம் கம்ப்யூட்டரை இவை என்ன செய்து விடும் என்ற இறுமாப்பில், பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இவர்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை ஏமாற்றி நாசப்படுத்தும் வைரஸ்களும் உண்டு என இவர்கள் அறிவதுஇல்லை. இது போல, பல பழக்கங்களுக்கு நாம் அடிமையாகி, நம் பாதுகாப்பினை மறந்து விடுகிறோம். இதனால், நம் கம்ப்யூட்டர் முடங்கும்போதுதான், அடடா! அவசரப் பட்டுவிட்டோமே என்று வேதனைப் படுகிறோம். 

பழக்க வழக்கங்களை மாற்றுங்கள். பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்

RTO - ஆன்லைன் சர்வீஸ்


RTO - ஆன்லைன் சர்வீஸ்


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்   கொண்டிருந்த வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லைன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX ,

என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல்,
புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட்,  மற்றும் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும்  மற்றும் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம்,

இந்த சேவை தான் நாம் எதிர்பார்த்த சேவை........... நாளை அல்லது நாளை
மறு நாள் செய்திகளில் வரலாம் ஆனால் நீங்கள் இன்றே கலக்குங்கள்.




1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application -



2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -



3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -



4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -



5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பயின்ட்மென்ட் - Online Appointment Booking for Road Test -



6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries -

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?




தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.
இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு :  TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர் 

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1.  ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?  

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.