செவ்வாய், 5 ஜூன், 2012

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 16-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.


  

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 16-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது. 16-ந்தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

19-ந்தேதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் விருப்பத்தின் பேரில் மீளவும் சொந்த ஒன்றியத்திற்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 23-ந்தேதி உதவி தொடக் கக்கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது.

24-ந்தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணி மாறுதல் ஆணை வழங்குதல்.

27-ந்தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்படுகிறது.

28-ந்தேதி முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்கப்படுகிறது. பிற்பகல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்கப்படும்.

29-ந்தேதி முற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணையும், பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு ஆணையும் வழங்கப்படுகிறது.

இந்த தகவலை தொடக்கக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக