வெள்ளி, 1 ஜூன், 2012

பள்ளிகள் திறப்பு: இலவசப் பாடப் புத்தகங்கள் விநியோகம்

 
ஜூன் 1: கோடை விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்புகள் தொடங்கிய முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன
.பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு மே 1-ம் தேதி முதல் மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது
 இந்த விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் சீருடையணிந்து பள்ளிக்கு வருவதைக் காணமுடிந்தது. காலை 9.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கின.
 ஏற்கெனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்த தமிழக அரசின் இலவசப் பாடப் புத்தகங்கள் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக