வெள்ளி, 1 ஜூன், 2012

பள்ளிக்கூடங்கள் திறந்தன.. மழலைகள் மகிழ்ந்தன..


                              அனைத்து பள்ளிகளும் 1.6.12 திறக்கப்பட்டன. பள்ளிக்கூடம் திறந்த உடன் மழலைகள், மாணவர்கள், மாணவிகள் கொண்ட மகிழ்ச்சியினை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.
      ”வானில் சிறகடித்து பறக்கும்
      பறவைகளை காணும்
      நெஞ்சம் மகிழும்..
     பள்ளிக்கூடத்திற்கு
     துள்ளி செல்லும்
     மழலை செல்வங்களை
காணும் கண்களில் பேரானந்தம்..
காலை நேரத்தில்
சாலைகளில் மாணாக்கர்கள்
மகிழ்ச்சி வெள்ளத்தில்
வரவேற்றன…பள்ளிக்கூட வாயில்கள்..
விடுமுறையில்
கடற்கரை மாலை நேர மணலில்
வீடு கட்டி ஆசை
ஆனந்த உறக்கத்தினை
அடைந்தவர்கள்..
இப்போதும் அதே மகிழ்ச்சி
தன்
நண்பர்களை, நண்பிகளை
காணும் போது கைக்குலுக்கி
நலம் விசாரிக்கும் போது..”
பள்ளிக்கூட பருவம் சிறார்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய நல்லதொரு இன்பம்..
அதனை அவர்கள் உணர்ந்தார்கள்..உணர்வார்கள்.. வாழ்க்கையில் உயர்வார்கள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக